நாடாளுமன்றம் நான்காவது வாரமாக முடங்கியது 
இந்தியா

நாடாளுமன்றம் நான்காவது வாரமாக முடங்கியது!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளி பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் நான்காவது வாரத்தின் முதல் நாளிலேயே எம்பிக்கள் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21 ஆம் தேதி காலை தொடங்கியது. முதல் நாளில் இருந்து ஆபரேஷன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல், பிகார் வாக்காளர் சிறப்பு திருத்தம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து உடனடியாக விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.

ஆபரேஷன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதம் நடத்தப்பட்ட நிலையில், பிகார் வாக்காளர் சிறப்பு திருத்தம் குறித்து உடனடியாக விவாதிக்கக் கோரி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை எம்பிக்கள் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், வாக்குத் திருட்டு குறித்து ராகுல் காந்தி எழுப்பிய குற்றச்சாட்டை விவாதிக்கக் கோரி நான்காவது வாரத்தின் முதல் நாளான இன்று எதிர்க்கட்சி எம்பிக்கள் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியிருந்தனர்.

ஆனால், இரு அவைத் தலைவர்களும் அனுமதி மறுத்ததால் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபடத் தொடங்கினர்.

இதையடுத்து, இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து நான்காவது வாரமாக எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வருவதால், அவை அலுவல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

Both houses of Parliament were adjourned on the first day of the fourth week of the monsoon session due to unrest among MPs

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வருக்கு Vijay எச்சரிக்கை!

தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜுக்கு சிறை!

ஆசிய கோப்பையை இந்தியாவிடம் வழங்க வலியுறுத்தும் பிசிசிஐ; மறுக்கும் மோஷின் நக்வி!

கல்லூரி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி! மாணவர்கள் போராட்டம்!

கரூர் பலி: பாஜக தனது அரசியல் விளையாட்டை தொடங்கிவிட்டது - திருமா | செய்திகள்: சில வரிகளில் | 30.9.25

SCROLL FOR NEXT