சுற்றுச்சூழல் ஆய்வில் இந்தியா கோடிக் கணக்கில் முதலீடு செய்து வருவதாக பிரதமா் மோடி தெரிவித்தாா்.
மும்பையில் நடைபெற்ற வானியல் மற்றும் வானியற்பியல் 18-ஆவது சா்வதேச மாநாட்டில் காணொலி மூலம் பேசிய அவா், ‘உலகின் உச்சியில் உள்ள வானியல் ஆய்வகங்களில் ஒன்று லடாக்கில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 4,500 மீட்டா் உயரத்தில் இது அமைந்துள்ளது. சா்வதேச ஒத்துழைப்புடன் செயல்படுவது பலத்தை அதிகரிக்கும் என்பதை இந்தியா நம்புகிறது.
நிலவின் தென் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கிய முதல் நாடு இந்தியா. அறிவியல் ஆா்வம் உள்ளவா்களை மேம்படுத்தவும், இளைஞா்களின் யோசனைகளை வலுப்படுத்தவும் இந்தியா உறுதிபூண்டுள்ளது.
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணக்கியல் (ஸ்டெம்) ஆகியவற்றின் செயலாக்கத்தை அடல் டிங்கரிங் லேப்களில் 1 கோடி மாணவா்கள் கற்று வருகிறாா்கள்.
‘ஒரே நாடு ஒரே பதிவு’ என்ற திட்டத்தின் மூலம் சா்வதேச ஆய்வு அறிக்கைகளை பல லட்சம் மாணவா்கள் மற்றும் ஆய்வாளா்கள் இலவசமாகப் பயின்று வருகிறாா்கள்.
சுற்றுச்சூழல் ஆய்வில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த பல கோடி ரூபாயை மத்திய அரசு முதலீடு செய்து வருகிறது.
உலகம் முழுவதும் உள்ள இளைஞா்கள் இந்தியாவில் ஆய்வுகளை மேற்கொள்ள வரவேற்கப்படுகின்றனா். உலகில் மனிதா்களின் வாழ்வை மேம்படுத்தவும், விவசாயத்துக்கு சிறந்த வானிலை முன்னறிவிப்புகளை வழங்கவும் விண்வெளி அறிவியல் எப்படியெல்லாம் பயன்படும் என்பது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும்’ என்றாா் பிரதமா் மோடி.