நடப்பு நிதியாண்டில் 10,660 கி.மீ. நெடுஞ்சாலை: அமைச்சர்
நடப்பு நிதியாண்டில் மட்டும் 10,660 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் அஜய் தம்தா தெரிவித்துள்ளார்.
நடப்பு நிதியாண்டில் மட்டும் 10,660 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் அஜய் தம்தா தெரிவித்துள்ளார்.
2025–26 நிதியாண்டில் 10 ஆயிரம் கி.மீ. வரை சாலை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளுக்கான நிலையான தொழில்நுட்பங்கள் மற்றும் முன்னேற்றத்துக்கான மாநாடு மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது.
Advertisement
Advertisement
செப்டம்பர் 3 - 4 தேதிகளில் நடைபெறும் இந்த மாநாட்டில், இணை அமைச்சர் அஜய் தம்தா சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார். சாலை போக்குவரத்து மேம்பாட்டிற்கு உதவும் வகையிலான புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் சவால்கள் குறித்து விவாதிப்பதற்காக கொள்கை வகுப்பாளர்கள், பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.
நெடுஞ்சாலைத் துறையானது நீடித்த பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை உறுதி செய்வது குறித்து அமைச்சர் அஜய் தம்தா பேசியதாவது,
சுதந்திரமான ஆய்வுக் கூடங்கள், வழக்கமான தணிக்கைகளால் ஒப்பந்ததாரர்கள் மற்றும் மேற்பார்வை அதிகாரிகளின் மூலம் சாலை தரத்தை மேம்படுத்தும் பணிகளை அமைச்சகம் செய்து வருகிறது.
மேலும், தேசிய நெடுஞ்சாலைச் சட்டம் பிரிவு 3 ஜி - யின் படி, சாலை அமைப்பதற்கு நிலங்களை வழங்கியவர்களுக்கு 90% இழப்பீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அமைக்கப்பட்டுவரும் சாலைப்பணிகளின் தரமும் ஒப்பந்ததாரர்களின் செயல்பாடுகளும் பரந்த ஆய்வின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
தில்லி - மீரட், கிழக்கு புறவசி விரைவுச் சாலை, அகமதாபாத் - வதோதாரா நெடுஞ்சாலை என 8,391 கி.மீ. சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 2,242 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை உள்பட 5,109 கி.மீ. விரைவுச் சாலைகள் அடங்கும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க | ஆக.21 மாஸ்கோவில்.. ரஷியா - இந்தியா வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்பு!
India builds 10,660 Km of highways in FY25, Eyes Rs 3 trillion push, Road Minister Ajay Tamta
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.