காங்கிரஸ் அலுவலகத்தில் ராகுல், கார்கே Congress
இந்தியா

செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே! காங்கிரஸ் அலுவலகத்தில் கொண்டாட்டம்!

செங்கோட்டை விழாவை ராகுல், கார்கே புறக்கணித்தது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவை மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் புறக்கணித்துள்ளனர்.

இதனிடையே, தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி 12-வது முறையாக தேசியக் கொடியை ஏற்றிவைத்து இன்று காலை உரையாற்றினார்.

இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற நிலையில், மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை.

கடந்தாண்டு சுதந்திர நாள் கொண்டாட்டத்தின் போது, செங்கோட்டையில் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்திக்கு கடைசி வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டது விமர்சனத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

Rahul, Kharge boycott Red Fort celebrations

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெட்டாவுடன் இணைந்த தமிழக அரசு! இனி வாட்ஸ்-ஆப் மூலமே 50 சேவைகள் பெறலாம்!

ஆதிக்கத்தை எந்நாளும் எதிர்த்து நிற்போம்: துணை முதல்வர் உதயநிதி

மூவர் அரைசதம்: ஆஸி.யை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா ஏ மகளிரணி!

பாஜகவில் இணைந்தார் நடிகை கஸ்தூரி!

அடல் கேண்டீனில் ரூ. 5 -க்கு உணவு! தில்லி முதல்வர் அறிவிப்பு

SCROLL FOR NEXT