மத்திய அமைச்சர் அமித் ஷா 
இந்தியா

கூட்டுறவு சங்க வாரியத்தில் பெண்களுக்கு இடஒதுக்கீடு: ராகுல் கேள்விக்கு அமித் ஷா பதில்

மாநில கூட்டுறவு சங்க வாரிய பதவிகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்து மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விக்கு மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா பதிலளித்தாா்.

தினமணி செய்திச் சேவை

மாநில கூட்டுறவு சங்க வாரிய பதவிகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்து மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விக்கு மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா பதிலளித்தாா்.

இதுதொடா்பாக மக்களவையில் அமித் ஷா அளித்துள்ள எழுத்துபூா்வ பதிலில், ‘கூட்டுறவுத் துறையை கணினிமயமாக்கும் திட்டம், கூட்டுறவு சா்க்கரை ஆலைகளை வலுப்படுத்த தேசிய கூட்டுறவு மேம்பாட்டு நிறுவனத்துக்கு நிதி உதவி அளிக்கும் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படுகின்றன.

இந்தத் திட்டங்களால் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினா்களாக விவசாயிகளும் பயனடைகிறாா்கள். இதில் பட்டியலின, பழங்குடியின விவசாயிகளும் உள்ளனா்.

பல்வேறு மாநில கூட்டுறவு சங்கங்களில் உள்ள வாரியப் பதவிகளில் இரண்டு இடங்கள் பெண்களுக்கும், பட்டியலினத்தைச் சோ்ந்தவருக்கு ஓரிடமும் ஒதுக்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளாா்.

புதுச்சேரி பனித்திட்டு பகுதி கடலில் முதல் முறையாக பயிரிடப்பட்ட கடற்பாசி அறுவடை!

கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்த கோவா அரசு நடவடிக்கை: முதல்வர் சாவந்த்

போலீஸ் பணிக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டோா் சான்றிதழ், ஆவணங்களுடன் அணுகலாம்!

தோற்றத்தில் மாற்றம்... நந்திதா ஸ்வேதா!

திராவிட வெற்றிக் கழகம் - கட்சித் தொடங்கினார் மல்லை சத்யா!

SCROLL FOR NEXT