இந்தியா

ஒருதலைக் காதல்! ஆசிரியர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற மாணவர்!

மத்திய பிரதேசத்தில் ஆசிரியர் மீது எரிக்க முயன்ற மாணவர் கைது

இணையதளச் செய்திப் பிரிவு

மத்திய பிரதேசத்தில் ஆசிரியர் மீது எரிக்க முயன்ற மாணவர் கைது செய்யப்பட்டார்.

மத்திய பிரதேசம் மாநிலம், நரசிங்கபுரம் மாவட்டத்தில் சூர்யான்ஷ் கோச்சார் (18) என்ற மாணவர், தனது பள்ளியில் பணியாற்றிய 26 வயதுடைய ஆசிரியரை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார்.

இருப்பினும், கோச்சாரின் பள்ளியில் இருந்து ஆசிரியர் 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே விலகியபோதிலும், கோச்சாருக்கும் ஆசிரியருக்கும் இடையே பேச்சுவார்த்தை இருந்துள்ளது.

இந்த நிலையில், சுதந்திர தினத்தன்று, ஆசிரியர் கட்டியிருந்த சேலை குறித்து தகாத முறையில் கோச்சார் விமர்சித்துள்ளார். இதனையடுத்து, மாணவரின் மீது ஆசிரியர் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, ஆசிரியரை பழிவாங்கும் நோக்கில் திங்கள்கிழமையில் அவரின் வீட்டுக்குச் சென்ற மாணவர், தன்னுடன் எடுத்துச் சென்ற பெட்ரோலை, ஆசிரியர் மீது ஊற்றி, பற்ற வைத்துவிட்டு, சம்பவ இடத்திலிருந்து தப்பியோடினார்.

இருப்பினும், ஆசிரியரை அங்கிருந்தவர்கள் காப்பாற்றி, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியரின் உடலில் 10 முதல் 15 சதவிகித தீக்காயங்கள் ஏற்பட்டு, மோசமான நிலையில் உள்ளபோதிலும், உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, தப்பியோடிய கோச்சாரை கைது செய்த காவல்துறையினர், அவர் மீது வழக்குப்பதிவு செய்து, விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.

Student Pours Petrol On Teacher, Sets Her On Fire

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 7 போ் கைது

நவராத்திரியில் உச்சம் தொட்ட வாகன, வீட்டு உபயோக பொருள்கள் விற்பனை!

இந்தோனேசிய பள்ளி கட்டட விபத்து: உயிரிழப்பு 14-ஆக உயா்வு

பிரிட்டன் யூத ஆலயத் தாக்குதல்: 6 பேரிடம் விசாரணை

SCROLL FOR NEXT