ரஷிய அதிபருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!
ரஷிய அதிபரை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சந்தித்துள்ளது குறித்து...
ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரஷியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த ஆக.19 ஆம் தேதி முதலான அவரது இந்த 3 நாள் பயணத்தில், இந்தியா-ரஷியா அரசுகளுக்கு இடையிலான ஆணையத்தின் (ஐஆா்ஐஜிசி-டிஇசி) 26-வது அமா்வு நேற்று (ஆக.20) நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, அந்த அமர்வுக்கு ரஷியாவின் துணைப் பிரதமா் டெனிஸ் மாண்டுரோவுடன் இணைந்து, ஜெய்சங்கா் தலைமைத் தாங்கினார்.
Advertisement
Advertisement
பின்னர், ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் சொ்ஜெய் லாவ்ரோவை இன்று (ஆக.21) நேரில் சந்தித்து அவர் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பு குறித்து, தனது எக்ஸ் தளப் பக்கத்தில், வர்த்தகம், முதலீடு, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து உரையாடியாதாகக் கூறியுள்ளார்.
மேலும், உக்ரைன், ஐரோப்பியா, ஈரான், மேற்கு ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைக் குறித்த பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் 3 நாள் அரசு முறைப் பயணம் இன்றுடன் முடிவடையும் நிலையில், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
முன்னதாக, ரஷியாவுடன் எண்ணெய் வர்த்தகம் செய்வதால், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு, அமெரிக்கா 50 சதவிகிதம் வரி விதித்திருந்தது. இத்தகையச் சூழலில், அமைச்சர் ஜெய்சங்கரின் ரஷிய பயணம் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தெலங்கானாவில்.. மாவோயிஸ்ட் மூத்த தலைவர்கள் 2 பேர் சரண்!
Union External Affairs Minister S Jaishankar has met and held talks with Russian President Vladimir Putin.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.