FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

சீன அதிபருடன் ரஷிய அதிபர் புதின் உரையாடல்!

சீனா மற்றும் ரஷியா அதிபர்களின் காணொலி உரையாடல் குறித்து...

Updated On : 4 பிப்ரவரி 2026, 4:22 pm IST
சீன அதிபர் ஷி ஜிங்பிங் - ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் (கோப்புப் படம்) - AP
பகிர்:

சீன அதிபர் ஷி ஜிங்பிங்குடன் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் காணொலி மூலம் உரையாடியுள்ளார்.

மேற்குலக நாடுகளின் தலைவர்கள் சமீபகாலமாக சீனாவுடனான உறவுகளை மேம்படுத்தும் முயற்சியாக அந்நாட்டு அதிபர் ஷி ஜிங்பிங்கை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சீனா உடன் முக்கிய உறவுகளை மேம்படுத்துவதற்காக அதிபர் ஜிங்பிங்குடன் ரஷிய அதிபர் புதின் காணொலி மூலம் புதன்கிழமை (பிப். 4) உரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

உக்ரைன் மீதான ரஷியாவின் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில் இந்த உரையாடல் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. இருப்பினும், இந்த உரையாடல் குறித்த முழுமையான தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.

கடந்த சில நாள்களுக்கு முன்பு சீனா சென்றிருந்த ரஷியாவின் பாதுகாப்பு ஆணையத்தின் செயலாளர் செர்ஜீ ஷோய்கு, அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி வாங் யீயை சந்தித்து உரையாடினார்.

ஏற்கெனவே, கனடா பிரதமர் மார்க் கார்னி மற்றும் பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர் ஆகியோர் சீனாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு அதிபர் ஜிங்பிங்குடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். மேலும், வரும் நாள்களில் ஜெர்மனியின் தலைவரும் சீனாவுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Russian President Vladimir Putin has held a video call with Chinese President Xi Jinping.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments