அமெரிக்க தூதருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!
அமெரிக்க தூதர் செர்ஜியோ கோருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு
மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் சந்தித்து பேசினார்.
புதுதில்லியில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் சந்தித்ததுடன், இந்தியா - அமெரிக்கா உறவுகள் மேலும் வலுப்பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த சந்திப்பு குறித்து ஜெய்சங்கர் தனது எக்ஸ் பதிவில், "செர்ஜியோ கோரை இன்று சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். எங்கள் உரையாடல் இருநாட்டு கூட்டாண்மையின் பல பரிமாணங்களை உள்ளடக்கியது.
Advertisement
Advertisement
இந்தியா - அமெரிக்க உறவுகளை வலுப்படுத்த நம்பிக்கையும் தெரிவித்தார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
முக்கியமான கனிமங்களின் விநியோகச் சங்கிலி தொடர்பான மாநாடு நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ள நிலையில், உலகத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரும் கலந்து கொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், ஜெய்சங்கரை செர்ஜியோ கோர் சந்தித்துப் பேசியுள்ளார்.
External Minister Jaishankar meets US Ambassador Gor; discusses multifaceted partnership
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.