முகப்பு
இந்தியா

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரின் மகனுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்!

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு விசாரணையில் சைதன்ய பகேல்...

Updated On : 23 ஆகஸ்ட், 2025 at 2:43 PM
சைதன்ய பகேல்
பகிர்:

மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரின் மகன் சைதன்ய பகேலை, 14 நாள் நீதிமன்றக் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

சைதன்ய பகேல் கைது குறித்து அமலாக்கத் துறை தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளதாவது: “மதுபான ஊழலில், சைதன்ய பகேலுக்கும் தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளது. ஆகவே, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீஸாரால் கடந்த 5 நாள்களாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை இன்றுடன் முடிவடைந்தது.

அதனைத்தொடர்ந்து, இன்று(ஆக. 23) ராய்பூரிலுள்ள நீதிமன்றத்தில் முறையிடுகையில், அவரை 14 நாள் விசாரிக்க அமலாக்கத்துறையால் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை செப். 6-ஆம் தேதி நடைபெறும். இதுவரை சைதன்ய பகேல் விசாரணைக்கு முழு அளவில் ஒத்துழைக்கவே இல்லை” என்று தெரிவிக்கப்பட்டது.

summary

Chaitanya Baghel sent to 14-day judicial custody

முழு கட்டுரையைப் படிக்க →