சைதன்ய பகேல் கோப்புப்படம்
இந்தியா

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரின் மகனுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்!

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு விசாரணையில் சைதன்ய பகேல்...

இணையதளச் செய்திப் பிரிவு

மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரின் மகன் சைதன்ய பகேலை, 14 நாள் நீதிமன்றக் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

சைதன்ய பகேல் கைது குறித்து அமலாக்கத் துறை தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளதாவது: “மதுபான ஊழலில், சைதன்ய பகேலுக்கும் தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளது. ஆகவே, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீஸாரால் கடந்த 5 நாள்களாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை இன்றுடன் முடிவடைந்தது.

அதனைத்தொடர்ந்து, இன்று(ஆக. 23) ராய்பூரிலுள்ள நீதிமன்றத்தில் முறையிடுகையில், அவரை 14 நாள் விசாரிக்க அமலாக்கத்துறையால் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை செப். 6-ஆம் தேதி நடைபெறும். இதுவரை சைதன்ய பகேல் விசாரணைக்கு முழு அளவில் ஒத்துழைக்கவே இல்லை” என்று தெரிவிக்கப்பட்டது.

Chaitanya Baghel sent to 14-day judicial custody

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்தடுத்து 2 புயல் சின்னங்கள்! தமிழகத்தில் 6 நாள்கள் பலத்த மழைக்கு வாய்ப்பு!

தீபாவளி: ஒலி, காற்று மாசுவை பதிவு செய்ய சேலத்தில் 3 இடங்களில் கருவி பொருத்தம்

கரூா் சம்பவம்: பலியானவர்களில் 39 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் தவெக சாா்பில் வங்கிக் கணக்கில் வரவுவைப்பு

பிகாா்: ஆளும் தே.ஜ. கூட்டணி வேட்பாளா் வேட்புமனு நிராகரிப்பு

தேவேந்திர குல வேளாளா் மக்களுக்கு அடிப்படை வசதி செய்து தரப்படவில்லை: டாக்டா் கே.கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT