கோப்புப் படம் PTI
இந்தியா

ஹிமாசலில் தீவிரமடையும் கனமழை! 339 சாலைகள் மூடல்!

ஹிமாசலப் பிரதேசத்தில் கனமழை தீவிரமடைந்து வருவது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

ஹிமாசலப் பிரதேசத்தில் தொடர் கனமழை பெய்து வருவதால், அம்மாநிலத்தில் 339 சாலைகள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிமாசலப் பிரதேசத்தின், பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. பருவமழை தொடங்கியது முதல் கடுமையான மழைப் பொழிவை எதிர்கொண்டு வரும் அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு வரும் ஆக.24 முதல் ஆக.26 ஆம் தேதி வரை கனமழைக்கான ”மஞ்சள் அலரட்” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை உள்பட 339 முக்கிய சாலைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், மண்டி மாவட்டத்தில் 162 சாலைகளும், குல்லுவில் 106 சாலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும், தேசிய நெடுஞ்சாலை 305-ம் தற்காலிகமாக மூடப்படுவதாக, ஹிமாசலின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூன் 20 ஆம் தேதி முதல், ஹிமாசலில் பெய்து வரும் பருவமழையின் தாக்கத்தால் இதுவரை 75 திடீர் வெள்ளம், 39 மேகவெடிப்புகள் மற்றும் மிகப் பெரியளவிலான 74 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால், 151 பேர் பலியானதுடன், 37 பேர் மாயமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: வாரம் ஒன்று.. ஆண்டுக்கு 50 ராக்கெட் ஏவ வேண்டும்: இலக்கு நிர்ணயித்த மோடி!

It has been reported that 339 roads in Himachal Pradesh have been closed due to continuous heavy rains.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்குத் திருட்டு விவகாரம்: வீடுவீடாகச் சென்று பாஜகவுக்கு எதிராக காங். பிரசாரம்!

ஜார்க்கண்டில் 2 கோடி போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 2 பேர் கைது

உள்நாட்டில் தயாரிக்கப்படும் முதல் செமிகண்டக்டர் சிப் 2025 இறுதிக்குள் சந்தைக்கு வரும்: பிரதமர் மோடி

உன் அழகில் மயிலும் தோற்கும்... அனன்யா பாண்டே!

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்கள் மூலம் இதுவரை 1.49 லட்சம் பேர் பயன்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT