முகப்பு
இந்தியா

மிசோரமில் புதிய ரயில் பாதை: செப். 13ல் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

மிசோரமில் பைராபி-சாய்ராங் ரயில் பாதையை செப்டம்பர் 13 ஆம் தேதி பிரதமர் திறந்துவைக்கிறார்.

Updated On : 23 ஆகஸ்ட் 2025, 12:33 pm IST
பைராபி-சாய்ராங் ரயில் பாதை
பகிர்:

மிசோரமில் பைராபி-சாய்ராங் ரயில் பாதையை செப்டம்பர் 13 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைப்பதாக முதல்வர் லால்துஹோமா தெரிவித்தார்.

சாய்ராங் தலைநகருக்கு அருகில் அமைந்திருப்பதால், இந்த ரயில் பாதை ஐஸ்வாலை ரயில்வே வரைபடத்தில் சேர்க்கும். ஐஸ்வாலில் நடந்த மிசோரம் காவல் சேவை சங்கத்தின் மாநாட்டில் லால்துஹோமா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

செப்டம்பர் 12 ஆம் தேதி பிரதமர் மாநில தலைநகருக்கு வந்து இரவு தங்குவார். மறுநாள் புதிய ரயில் பாதையை அவர் திறந்து வைப்பார். பிரதமரின் வருகை தொடர்பாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுடன் கலந்துரையாடியதாக முதல்வர் லால்துஹோமா கூறினார்.

Advertisement

Advertisement

சாய்ராங் ரயில் நிலையம் உலகத்தரம் வாய்ந்த வசதியாக மேம்படுத்தப்படும், மேலும் ராஜதானி ரயில் சேவைகள் இயக்கப்படும். 51.38 கி.மீ நீளமுள்ள இந்த ரயில் பாதை திட்டம், வடகிழக்கு முழுவதும் இணைப்பு மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட மத்திய அரசின் ஆக்ட் ஈஸ்ட் கொள்கையின் ஒரு பகுதியாகும்.

புதிய ரயில் பாதை ஐஸ்வாலை அசாமின் சில்சார் நகரத்துடனும், நாட்டின் பிற பகுதிகளுடனும் இணைக்கும், மிசோரத்தை நாட்டின் ரயில்வே வரைபடத்தில் முழுமையாக ஒருங்கிணைக்கும். இந்தப் பாதையில் 12.8 கி.மீ நீளமுள்ள 48 சுரங்கப்பாதைகள், 55 பெரிய பாலங்கள் மற்றும் 87 சிறிய பாலங்கள் இருப்பதாகக் கட்டுமான பொறியாளர்கள் கூறுகின்றனர். பாலம் எண் 196, குதுப்மினாரை விட 104 மீட்டர் உயரமாக இருப்பதாக அவர் கூறினார்.

summary

Prime Minister Narendra Modi will inaugurate the Bairabi-Sairang railway line in Mizoram on September 13, Chief Minister Lalduhoma has said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments