உத்தரப் பிரதேசத்தில் தடுப்புச்சுவர் மீது போலீஸ் வாகனம் மோதியதில் 6 காவலர்கள் காயமடைந்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாதுகாப்பு பணிக்காக காவலர்கள் போலீஸ் வாகனத்தில் ஹாதிகவன் சென்றுகொண்டிருந்தனர்.
சனிக்கிழமை அதிகாலை குந்தா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஷேக்பூர் அருகே பிரயாக்ராஜ்-லக்னௌ நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த போலீஸ் வாகனம் தடுப்புச் சுவர் மீது மோதியது.
இந்த சம்பவத்தில் 6 காவலர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். உடனே அவர்கள் குந்தாவில் உள்ள சமூக சுகாதார மையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
மாவட்ட தலைமையகமான பிரதாப்கரில் இருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.