முகப்பு
உலகம்

பாகிஸ்தானில் காவலர்கள் 2 பேர் கடத்தி கொலை

பாகிஸ்தானில் காவலர்கள் 2 பேர் தீவிரவாதிகளால் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 6:28 PM
பாகிஸ்தான்.
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 6:14 PM

பாகிஸ்தானில் காவலர்கள் 2 பேர் தீவிரவாதிகளால் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் பன்னு மாவட்டத்தில் தொழுகையின் போது ஒரு மசூதியில் நுழைந்து மூன்று சகோதரர்களைக் ஆயுதமேந்திய தீவிரவாதிகள் புதன்கிழமை கடத்திச் சென்றனர்.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 6:25 PM

அதில் இரண்டு காவலர்களை கொலைசெய்து அவர்களின் உடல்களை மார்வாட் கால்வாய் சாலையில் வீசிச் சென்றனர். அதே நேரத்தில் ஆணையர் அலுவலகத்தில் எழுத்தராக இருந்த மூன்றாவது சகோதரர் கடத்தல்காரர்களின் காவலில் உள்ளார்.

Advertisement

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 6:25 PM

மூன்றாவது கைதியை மீட்க பாதுகாப்புப் படையினர் தேடுதல் தீவிர வேட்டையைத் தொடங்கியுள்ளனர். நேரில் கண்ட சாட்சிகள் கூறுகையில், 10 முதல் 12 ஆயுதம் ஏந்திய நபர்கள் மசூதிக்குள் நுழைந்து, பிணைக் கைதிகளாக 3 பேரைப் பிடித்து, தப்பிச் சென்றதாகக் கூறினர்.

இச்சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.