FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

பாகிஸ்தானில் முன்விரோதம் காரணமாக 5 பேர் சுட்டுக்கொலை

வடமேற்கு பாகிஸ்தானில் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி.....

Updated On : 11 ஜூலை 2026, 9:09 pm IST
கோப்புப் படம்
பகிர்:

வடமேற்கு பாகிஸ்தானில் முன்விரோதம் காரணமாக 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் முன்விரோதம் காரணமாக பெண் உட்பட ஐந்து பேர் சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் மாகாணத்தின் லக்கி மார்வத் மாவட்டத்தில் நடந்துள்ளது.

இந்தத் தாக்குதல் பழைய தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக நடத்தப்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

பலியானவர்களின் உடல்களை லக்கி நகர மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை, ஆதாரங்களைச் சேகரித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. குற்றவாளிகள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

summary

At least five people, including a woman, were shot dead on Saturday in an alleged incident of longstanding enmity in Pakistan's restive Khyber Pakhtunkhwa province, police said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments