முகப்பு
இந்தியா

குருவாயூர் கோயில் குளத்தில் கால்நனைத்த பிக்பாஸ் பிரபலம்! புனிதத்தை மீட்க பரிகார பூஜை!

குருவாயூர் கோயிலில் பக்தர்களுக்கு தடை, புனிதத்தை மீட்க பூஜை நடத்துவது பற்றி...

Updated On : 26 ஆகஸ்ட் 2025, 12:09 pm IST
ஜாஸ்மின் ஜாஃபர் நீக்கிய விடியோவில் இருந்து எடுக்கப்பட்ட படம்.
பகிர்:

குருவாயூர் கோயில் குளத்தில் கால்களை நனைத்து இஸ்லாமிய பெண் ரீல்ஸ் எடுத்த நிலையில், பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்பட்டு புனிதத்தன்மையை மீட்கும் பரிகார பூஜை நடத்தப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கேரளத்தை சேர்ந்த யூடியூப் பிரபலம் ஜாஸ்மின் ஜாஃபர், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் கோயிலின் குளத்தில் கால்களை நனைத்து ரீல்ஸ் எடுத்த விடியோ இணையத்தில் வைரலானது.

இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில், தனது விடியோவை நீக்கிய ஜாஸ்மின் ஜாஃபர், மன்னிப்பு கோரியுள்ளார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், கோயில் கட்டுப்பாடுகளை மீறி குளத்தின் புனிதத்தை ஜாஸ்மின் ஜாஃபர் அசுத்தம் செய்துவிட்டதாக கோயில் நிர்வாகம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

மேலும், இன்று (ஆக. 27) பிற்பகல் 1 மணிவரை கோயிலில் பக்தர்களின் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு, குளத்தின் புனிதத்தன்மையை மீட்க பரிகார பூஜை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பூஜைகள் தொடர்ந்து 6 நாள்கள் நடத்தப்படும் என்றும் கட்டுப்பாடுகளுக்கு பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோயில் நிர்வாகம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே, கோயிலில் தடை செய்யப்பட்ட பகுதியான குளத்தில் கேரள உயர்நீதிமன்ற உத்தரவை மீறி ரீல்ஸ் எடுத்த ஜாஸ்மின் ஜாஃபருக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

ஜாஸ்மின் ஜாஃபர், மலையாள பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாம் இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Bigg Boss celebrity dips feet in Guruvayur temple pond : Parikaram Pooja to restore sanctity

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments