உத்தரப்பிரதேசத்தில் கொட்டிய பண மழை!
உத்தரப்பிரதேசத்தில் குரங்கு பறித்துவந்த பையிலிருந்து கொட்டிய பணத்தை எடுக்க மக்கள் குவிந்தனர்.
Updated On : 28 ஆகஸ்ட், 2025 at 11:55 AM
உத்தரப்பிரதேச மாநிலம் ஔரய்யா பகுதியில், மரத்திலிருந்து பணமழை கொட்டியதால், அங்கு பணத்தை எடுக்க மக்கள் கூட்டம் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
செவ்வாய்க்கிழமை நடந்த இந்த சம்பவத்தில், குரங்கு ஒன்று பணத்தை மரத்திலிருந்து வீச ஏராளமான மக்கள் அந்த பணத்தை எடுக்க குவிந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.