ரூ.232 கோடி மோசடி! இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் மேலாளர் கைது!
இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் மூத்த மேலாளர் மோசடியில் ஈடுபட்டதாக கைது
Updated On : 30 ஆகஸ்ட், 2025 at 7:36 PM
இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் மூத்த மேலாளர் மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார்.
இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் (AAI) மூத்த மேலாளராகப் பணிபுரிந்து வந்த ராகு விஜய் என்பவர், டேராடூன் விமான நிலையத்தில் பணியமர்த்தப்பட்டபோது, மின்னணு பதிவுகளைக் கையாள்வதில் மோசடி செய்ததாக இந்திய விமான நிலையங்கள் ஆணையம் புகார் அளித்தது.
Updated On : 30 ஆகஸ்ட், 2025 at 7:44 PM
இதுகுறித்த விசாரணையில், டேராடூன் விமான நிலையத்தில் மின்னணு பதிவுகளைக் கையாள்வதில் மோசடி செய்து, தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குக்கு ராகுல் பணத்தை மாற்றியதாகக் கூறி, ரூ. 232 கோடி வரையில் மோசடி செய்துள்ளதாகவும் தெரிய வந்தது.
Advertisement
இதனையடுத்து, ராகுல் விஜய்யை மத்திய புலனாய்வுப் பிரிவு கைது செய்தது.
summary