தெருநாய்களுக்கு நன்றியுள்ளவராக இருப்பேன்: நீதிபதி நகைச்சுவை
தெரு நாய்கள் விவகாரம் தொடர்பான வழக்கின் மூலம் அங்கீகாரம் கிடைத்ததாக நீதிபதி விக்ரம் நாத் நகைச்சுவை
தெரு நாய்கள் தொடர்பான விவகாரத்தில் தெரு நாய்களுக்கு நன்றியுள்ளவராக இருக்க கடமைப்பட்டிருப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.
திருவனந்தபுரத்தில் தேசிய சட்ட சேவை ஆணையத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நீதிபதி விக்ரம் நாத் பேசுகையில்,
நீண்ட காலமாக எனது வேலைகளுக்காக சிறு வட்டாரத்திற்குள்ளாகவே நான் அறியப்பட்டிருக்கிறேன். ஆனால், தெரு நாய்கள் விவகாரம் தொடர்பாக, இந்த நாட்டில் மட்டுமல்ல - உலகெங்கிலும் உள்ள முழு சிவில் சமூகத்திலும் எனக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
Advertisement
Advertisement
இந்த அங்கீகாரத்துக்காக தெரு நாய்களுக்கும் நான் நன்றியுள்ளவராக இருக்கிறேன்.
இந்த வழக்கை எனக்கு ஒதுக்கிய தலைமை நீதிபதிக்கும்(பி. ஆர். கவாய்) நான் நன்றியுள்ளவராக இருக்கிறேன்.
நாய்களை நேசிப்பவர்கள்தவிர, நாய்களும் எனக்கு வாழ்த்துகளை வழங்குவதாகவும் எனக்கு செய்திகள் வருகின்றன என்று தெரிவித்தார்.
2027 ஆம் ஆண்டில் தலைமை நீதிபதிக்கான வரிசையில் இடம்பெறும் விக்ரம் நாத் தான், தெரு நாய்கள் தொடர்பான வழக்கில் ஆகஸ்ட் 11 ஆம் தேதியில் வெளியான உத்தரவை மாற்றியமைத்தவர்.
இதையும் படிக்க: புதுச்சேரி: தொடர் தொல்லை அளிக்கும் அமைச்சர்! பெண் எம்எல்ஏ பரபரப்பு புகார்
Stray dogs case made me known globally: Supreme Court Justice Vikram Nath
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.