விவசாயி மகன், குடியரசு துணைத் தலைவராகியுள்ளார் : சி.பி. ராதாகிருஷ்ணனை வரவேற்று மோடி உரை!
விவசாயி மகன், குடியரசு துணைத் தலைவராகியுள்ளார் என்று மாநிலங்களவைத் தலைவராக இன்று பொறுப்பேற்றிருக்கும் சி.பி. ராதாகிருஷ்ணனை வரவேற்று மோடி உரையாற்றினார்.
புது தில்லி: சாதாரண பின்னணியில் இருந்து குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு சி பி ராதாகிருஷ்ணன் உயர்ந்தது ஜனநாயகத்தின் உண்மையான வலிமையை பிரதிபலிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. குடியரசு துணைத்தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்ற பிறகு, முதல் முறையாக நடைபெறும் கூட்டத் தொடர் என்பதால் மாநிலங்களவையில், பிரதமர் நரேந்திர மோடி குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்றுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனை வரவேற்று உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், விவசாயி மகன் சி.பி. ராதாகிருஷ்ணன், இன்று குடியரசு துணைத் தலைவராக உயர்ந்துள்ளார். நாட்டிற்காக தன்னுடைய வாழ்வை அர்ப்பணித்துள்ளவர் என்று புகழாரம் சூட்டினார்.
Advertisement
Advertisement
மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் மரியாதையைப் பேணுவார்கள் என்று நான் உங்களுக்கு இங்கே உறுதியளிக்கிறேன்.
எங்கள் தலைவர் ஒரு எளிய குடும்பத்திலிருந்து, ஒரு விவசாய குடும்பத்திலிருந்து வந்தவர், மேலும் அவர் தனது முழு வாழ்க்கையையும் சமூக சேவைக்காக அர்ப்பணித்துள்ளார். அரசியல்தான் இதற்கான ஒரு அம்சமாக இருந்து வருகிறது, ஆனால் அவரது முக்கிய நோக்கம் சமூக சேவையாக இருந்து வருகிறது. அவர் சமூகத்திற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர். சமூக சேவையில் ஆர்வமுள்ள நம் அனைவருக்கும் அவர் ஒரு உத்வேகமாகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறார் என்று மோடி கூறினார்.
Our Chairman comes from a simple family, a farmer's family, and he has dedicated his entire life to social service.
இதையும் படிக்க.. எஸ்ஐஆர்-க்கு எதிர்ப்பு! தொடங்கியவுடன் முடங்கிய மக்களவை!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.