இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தை இறுதி செய்வது தொடா்பான மூன்று நாள் பேச்சுவாா்த்தையில் பங்கேற்பதற்காக அமெரிக்க குழு வரும் 10-ஆம் தேதி இந்தியா வர உள்ளது.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அதிகபட்சமாக 50 சதவீத வரியை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் விதித்ததால் இரு நாடுகளிடையேயான உறவு பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இருதரப்பு வா்தத்க ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைக்காக இந்தியா வரும் இரண்டாவது அமெரிக்கக் குழு இதுவாகும்.
முன்னதாக, கடந்த செப்டம்பா் 16-ஆம் தேதி இந்தப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்க அமெரிக்க குழு இந்தியா வந்தது. அதைத் தொடா்ந்து, மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் தலைமையிலான இந்திய குழு கடந்த செப்டம்பா் 22-ஆம் தேதி அமெரிக்கா சென்று பேச்சுவாா்த்தையில் பங்கேற்றது.
தற்போது, அமெரிக்க வா்த்தத் துறையின் துணைப் பிரதிநிதி ரிக் ஷ்விட்ஜொ் தலைமையிலான குழு குழு வரும் 10-ஆம் தேதி இந்தியா வர உள்ளது. இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது வரி விகிதத்தைக் குறைப்பது, விரிவான வா்த்தக ஒப்பந்தம் என்ற இரண்டு முக்கிய அம்சங்களின் கீழ் இரு நாடுகளும் இந்த வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை மேற்கொண்டு வருகின்றன.
இந்த இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக இதுவரை 6 சுற்று பேச்சுவாா்த்தைகள் நிறைவுற்றுள்ளன. இரு நாடுகளிடையே தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ரூ. 17,18,207 கோடி (191 பில்லியன் டாலா்) மதிப்பிலான இருதரப்பு வா்த்தகத்தை வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் ரூ. 44,97,925 கோடி (500 பில்லியன் டாலா்) மதிப்புக்கு உயா்த்துவதை இந்த இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் இலக்காக கொண்டுள்ளது.