மியான்மரைத் தாக்கிய நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!
மியான்மரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது பற்றி...
மியான்மரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நிலநடுக்கவியல் மையம் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
மியான்மரில் இன்று காலை 10.18 மணியளவில் ரிக்டர் அளவில் 3.8 ஆக நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கமானது 80 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் அட்சரேகை 23.06 ஆகவும், நீளம்: 94.51 ஆகவும் பதிவானது.
Advertisement
Advertisement
இன்று பதிவான நிலநடுக்கத்தால் எந்தவித சேதமும், உயிர்ப்பலியும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக டிசம்பர் 5 ஆம் தேதி, மியான்மரை 3.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் தாக்கியது.இதன் ஆழம் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது.
பொதுவாக மிதமான நிலநடுக்கங்கள், சக்திவாய்ந்த நிலநடுக்கங்களை விட ஆபத்தானவை. ஏனென்றால், ஆழமற்ற நிலநடுக்கங்களிலிருந்து வரும் நில அதிர்வு அலைகள் மேற்பரப்புக்குப் பயணிக்கக் குறுகிய தூரத்தைக் கொண்டுள்ளன, இதன் விளைவாக வலுவான நில அதிர்வுகள் மற்றும் கட்டமைப்புகளுக்கு அதிக சேதம் விளைவிப்பதோடு, அதிக உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.