ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் 
இந்தியா

மியான்மரைத் தாக்கிய நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

மியான்மரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

மியான்மரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நிலநடுக்கவியல் மையம் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

மியான்மரில் இன்று காலை 10.18 மணியளவில் ரிக்டர் அளவில் 3.8 ஆக நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கமானது 80 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் அட்சரேகை 23.06 ஆகவும், நீளம்: 94.51 ஆகவும் பதிவானது.

இன்று பதிவான நிலநடுக்கத்தால் எந்தவித சேதமும், உயிர்ப்பலியும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக டிசம்பர் 5 ஆம் தேதி, மியான்மரை 3.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் தாக்கியது.இதன் ஆழம் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது.

பொதுவாக மிதமான நிலநடுக்கங்கள், சக்திவாய்ந்த நிலநடுக்கங்களை விட ஆபத்தானவை. ஏனென்றால், ஆழமற்ற நிலநடுக்கங்களிலிருந்து வரும் நில அதிர்வு அலைகள் மேற்பரப்புக்குப் பயணிக்கக் குறுகிய தூரத்தைக் கொண்டுள்ளன, இதன் விளைவாக வலுவான நில அதிர்வுகள் மற்றும் கட்டமைப்புகளுக்கு அதிக சேதம் விளைவிப்பதோடு, அதிக உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

An earthquake of magnitude 3.8 struck Myanmar on Monday, as reported by the National Center for Seismology (NCS).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காலம் மலர்கின்றது கனவு பலிக்கின்றது... தேஜூ அஸ்வினி!

இந்தியாவுக்கு சேவையாற்ற ஆவல்: எலான் மஸ்க்

உனக்காகவே நான் வாழ்கிறேன்... பிரீத்தி முகுந்தன்!

வங்கதேசம்: இடைக்கால அரசில் முக்கிய பதவி வகித்த இருவர் ராஜிநாமா!

குடியரசுத் தலைவர் நாளை மணிப்பூர் பயணம்!

SCROLL FOR NEXT