எம்என்எஸ் கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே 
இந்தியா

கலவர வழக்கு: ராஜ் தாக்கரே தாணே நீதிமன்றத்தில் ஆஜர்!

2008 கலவர வழக்குத் தொடர்பாக..

இணையதளச் செய்திப் பிரிவு

2008 ஆம் ஆண்டு கலவரம் தொடர்பான வழக்கில் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனைத் தலைவர் ராஜ் தாக்கரே தாணே மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார்.

கடந்த 2008ஆ ஆண்டு வட இந்தியர்களுக்கு எதிரான பேச்சு தொடர்பாக ராஜ் தாக்கரே கைது செய்யப்பட்டதையடுத்து பெரும் கலவரம் ஏற்பட்டது. இக்கலவரத்தைத் தூண்டிவிட்டதாக ராஜ் தாக்கரே மீதும் அவரது கட்சித் தொழிலாளர்கள் பலரின் மீதும் நீதிமன்றம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது.

மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் 109 மற்றும் 117-ன் கீழ் ராஜ் தாக்கரே மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை தாணே மாவட்ட நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராஜ் தாக்கரே நேரில் ஆஜரானார். அப்போது நீதிபதி குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்கிறீர்களா என்று கேட்டபோது ராஜ் தாக்கரே இல்லை என்று பதிலளித்தார்.

இதையடுத்து இந்த வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 16ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்ததாகவும், எம்.என்.எஸ் தலைவர் நீதிமன்றம் இயக்கும்போதெல்லாம் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்வார் என்றும் ராஜ் தாக்கரேவின் வழக்குரைஞர் ராஜேந்திர ஷிரோட்கர் தெரிவித்தார்.

ராஜ் தாக்கரே விசாரணைக்கு வந்தபோது நீதிமன்ற வளாகத்தில் பெரும் கூட்டமும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Maharashtra Navnirman Sena chief Raj Thackeray on Thursday appeared in a court in Thane district in connection with a 2008 rioting case and pleaded not guilty, his lawyer said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விமானங்கள் ரத்து: 4 ஆய்வாளா்களை பணியிடை நீக்கம் செய்து டிஜிசிஏ நடவடிக்கை

தேநீா், சிற்றுண்டி, மதிய உணவு வழங்க சுயஉதவிக் குழுக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆக்கிரமிப்பின் பிடியில் 1,068 ஹெக்டோ் ரயில்வே நிலம்: நாடாளுமன்றத்தில் தகவல்

தயக்கம் வேண்டாம்!

2-ஆவது நாளாக பங்குச் சந்தையில் முன்னேற்றம்

SCROLL FOR NEXT