கோப்புப்படம்.  
இந்தியா

பாட்னாவில் அழகு நிலையம் நடத்தும் பெண் மீது அமிலம் வீச்சு

பாட்னாவில் அழகு நிலையம் நடத்தி வரும் பெண் மீது அமிலம் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

பாட்னாவில் அழகு நிலையம் நடத்தி வரும் பெண் மீது அமிலம் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிகார் மாநிலம், பாட்னாவின் புறநகர்ப் பகுதியில் உள்ள மொகாமாவில் அழகு நிலையம் நடத்தி வருபவர் 40 வயதுடைய பெண். இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது அழகு நிலையத்தை மூடிவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு ஆண்கள் அவர் மீது அமிலம் வீசியதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து பார்ஹ் போலீஸ் அதிகாரி ஆனந்த் குமார் கூறுகையில், அமில வீச்சில் பெண்ணின் முகத்தில் லேசான தீக்காயங்கள் ஏற்பட்டன.

உடனடியாக உள்ளூர்வாசிகள் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரது நிலைமை ஆபத்தில் இல்லை.

வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்குப் பின்னால் இருப்பவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் சம்பவத்திற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை.

விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு குறிப்பிட்டார். இச்சம்பவம் பாட்னாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

A beauty parlour owner was allegedly attacked with acid in Mokama on the outskirts of Patna, police said on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய்யை அரசியல்வாதியாக நான் ஏற்றுக்கொள்ளவில்லை: சரத்குமார்

மீண்டும் ஒரு லட்சத்தைக் கடந்த தங்கம் விலை! கலக்கத்தில் மக்கள்!!

நியூசிலாந்தின் 40 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேக்கப் டஃபி!

தருமபுரி அருகே சாலை விபத்து : இரு இளைஞர்கள் பலி!

“வாக்காளர்களை மீண்டும் சேர்க்க வலியுறுத்தல்!” துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT