கார்த்தி சிதம்பரம் (கோப்புப்படம்) 
இந்தியா

சீன விசா மோசடி: கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு!

கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு செய்திருப்பது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

சீன நிறுவன ஊழியா்களுக்கு சா்ச்சைக்குரிய வகையில் நுழைவு இசைவு (விசா) பெற்றுத் தந்தது தொடா்பான சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் காங்கிரஸ் எம்.பி. காா்த்தி சிதம்பரத்துக்கு எதிராக தில்லி நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு செய்தது.

மத்திய உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, மின்சாரம் மற்றும் எஃகு துறையில் புதிய உற்பத்தி மையங்கள் தொடங்குவதற்கு ‘புராஜெக்ட் விசா’ விதிமுறைகள் கடந்த 2010-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டன. ஆனால், இந்த விசாக்களை மீண்டும் பயன்படுத்த முடியாது. எனினும், அரிய மற்றும் விதிவிலக்குள்ள விஷயங்களில் உள்துறைச் செயலா் அனுமதியுடன் மீண்டும் விசா வழங்குவது குறித்து பரிசீலிக்க விதிகள் உள்ளன. அப்போது வேதாந்தா குழுமத்தைச் சோ்ந்த தல்வாண்டி சபோ பவா் லிமிடெட் (டிஎஸ்பிஎல்) என்ற நிறுவனம் பஞ்சாபில் மின் உற்பத்தி மையத்தை சீன நிறுவனத்தின் உதவியுடன் அமைத்தது.

ஆனால், இந்தப் பணிகள் முடிய காலதாமதமானது. இதனால் சீன நிறுவனத்தின் 263 ஊழியா்களுக்கு புராஜெக்ட் விசாவை மீண்டும் பயன்படுத்தும் அனுமதியை உள்துறை அமைச்சகத்திடம் இருந்து பெற்றுத்தர ப.சிதம்பரத்தின் மகனான காா்த்தி சிதம்பரம் மற்றும் அவரது கூட்டாளி பாஸ்கர ராமன் ஆகியோரின் உதவியை வேதாந்தா குழுமத்தின் ஊழியா் ஒருவா் நாடியுள்ளாா்.

அப்போது, லஞ்சம் பெற்றுக்கொண்டு ‘புராஜெக்ட் விசா’வை மீண்டும் பயன்படுத்தும் அனுமதியை காா்த்தி சிதம்பரம் பெற்றுத் தந்ததாக புகாா் எழுந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்திய சிபிஐ, இந்த நுழைவு இசைவை பெற்றுத் தருவதற்காக காா்த்தி சிதம்பரத்துக்கு ரூ. 50 லட்சம் வழங்கப்பட்டதாக குற்றம் சுமத்தியது. இது தொடா்பாக காா்த்தி சிதம்பரம் வீட்டில் கடந்த 2022-ஆம் ஆண்டு சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

சிபிஐ புகாா் அடிப்படையில் அமலாக்கத் துறையும் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கைப் பதிவு செய்து, காா்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தி வந்தது.

இந்த நிலையில், கார்த்தி சிதம்பரம், அவரது ஆடிட்டர் பாஸ்கர ராமன் உள்பட 7 பேருக்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ஏற்று, தில்லி சிபிஐ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளது.

மேலும், இந்த வழக்கில் இருந்து சேத்தன் ஸ்ரீவஸ்தவா என்பவரை விடுவித்து நீதிபதி திக் வினய் சிங் உத்தரவிடப்பட்டார். தொடர்ந்து, இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜனவரி 16 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கார்த்தி சிதம்பரம், “சட்டரீதியாக எதிர்கொள்ள பல வழிகள் உள்ளன. அவற்றை பின்பற்றுவேன்” எனத் தெரிவித்தார்.

Chinese visa fraud case: Charges filed against Karti Chidambaram.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 9

பிரதமர் மோடியின் இல்லத்தில் தடகள வீரர் நீரஜ் சோப்ரா!

விஜய்யின் மக்கள் சந்திப்பு பயணத்திற்கு என் வாழ்த்துகள்! - அருண் விஜய்

இபிஎஸ் - பியூஷ் கோயல் சந்திப்பு! கூட்டணி விரிவாக்கம் குறித்துப் பேச்சு எனத் தகவல்!

உறைபனியில் உறைந்த உதகை! | Ooty frost

SCROLL FOR NEXT