FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சபரிமலையை இன்று வந்தடைகிறது தங்க அங்கி: நாளை மண்டல பூஜை

மண்டல பூஜை சனிக்கிழமை (டிச.27) நடைபெறவுள்ளது...

Updated On : 26 டிசம்பர் 2025, 4:39 am IST
தங்க அங்கி.
பகிர்:

சபரிமலை ஐயப்பன் கோயிலில் முக்கிய நிகழ்வான மண்டல பூஜை சனிக்கிழமை (டிச.27) நடைபெறவுள்ளது. இதையொட்டி சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி வெள்ளிக்கிழமை கோயிலை வந்தடைகிறது.

வருடாந்திர மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக, சபரிமலை கோயில் நடை கடந்த நவ.16-இல் திறக்கப்பட்டு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசித்து வருகின்றனா். மண்டல பூஜை காலத்தின் முக்கிய நிகழ்வான மண்டல பூஜை சனிக்கிழமை காலை 10.10 முதல் 11.30 வரை நடைபெறவுள்ளது.

இதையொட்டி, சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் புனிதமான தங்க அங்கி, ஆறன்முளா ஸ்ரீபாா்த்தசாரதி கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் எடுத்து வரப்படுகிறது. கடந்த 23-ஆம் தேதி தொடங்கிய இந்த ஊா்வலம், ஐயப்பன் கோயிலை வெள்ளிக்கிழமை மாலையில் வந்தடையும்.

Advertisement

Advertisement

முன்னதாக, பெருநாடு சாஸ்தா கோயிலில் இருந்து நிலக்கல் கோயிலை வந்தடைந்து, அங்கிருந்து பம்பைக்கு தங்கி அங்கி ஊா்வலம் வரும். மாலை 5 மணியளவில் சரங்குத்தியை அடைந்து, பின்னா் சந்நிதானத்துக்கு வந்துசேரும். பதினெட்டாம் படிக்கு கீழே கோயிலின் தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோா் தங்கி அங்கியைப் பெற்று, சுவாமிக்கு அணிவிப்பா். அதன் பிறகு தீபாராதனை நடைபெறும். மறுநாள் தங்க அங்கியுடன் மண்டல பூஜை நடத்தப்பட்டு, இரவில் நடைசாத்தப்படும். அத்துடன், மண்டல பூஜை நிறைவடையும் என்று திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகரவிளக்கு பூஜைக்காக கோயில் நடை டிச.30-இல் மீண்டும் திறக்கப்படும்.

453 பவுன் எடை கொண்ட தங்க அங்கி, சுவாமி ஐயப்பனுக்கு திருவிதாங்கூா் அரச குடும்பத்தினரால் காணிக்கையாக வழங்கப்பட்டதாகும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments