இந்தியா

புகையிலைப் பொருள்கள் மீது கூடுதல் கலால் வரி: பிப்.1 அமல்

வரும் பிப். 1-ஆம் தேதிமுதல் புகையிலைப் பொருள்களுக்கு கூடுதலாக கலால் வரி, பான் மசாலாவுக்கு புதிய செஸ் வரி விதிக்கப்படும் என்று மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

தினமணி செய்திச் சேவை

வரும் பிப். 1-ஆம் தேதிமுதல் புகையிலைப் பொருள்களுக்கு கூடுதலாக கலால் வரி, பான் மசாலாவுக்கு புதிய செஸ் வரி விதிக்கப்படும் என்று மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையில், "பிப். 1-ஆம் தேதிமுதல் பான் மசாலா, சிகரெட், புகையிலை மற்றும் அதுபோன்ற பொருள்களுக்கு 40 சதவீத சரக்கு மற்றும் சேவை வரியும் (ஜிஎஸ்டி), பீடிகளுக்கு 18 சதவீத ஜிஎஸ்டியும் விதிக்கப்படும். அத்துடன் புகையிலை மற்றும் அதனுடன் தொடர்புள்ள பொருள்களுக்குக் கூடுதலாக கலால் வரி, பான் மசாலாவுக்கு புதிய செஸ் வரி விதிக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், மெல்லும் புகையிலை, ஜர்தா மற்றும் குட்கா பேக்கிங் இயந்திர விதிகள் 2026}ஐயும் மத்திய நிதியமைச்சகம் அறிவித்தது.

புகையிலை மீது கூடுதலாக கலால் வரி, பான் மசாலா தயாரிப்புக்கு புதிய செஸ் வரி விதிக்கும் மசோதாக்களை கடந்த டிசம்பரில் நாடாளுமன்றம் நிறைவேற்றியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெல்போர்ன் பல்கலையில் பி.காம்! மாணவர் சேர்க்கை 2026 மார்ச்!!

தினமணி வாசகர்களுக்காக.. சட்டமும் விளக்கமும் அறிமுகம்!

இருசக்கர வாகனத்தை திருடிய முதியவா் கைது

பல்லியை விரட்ட முட்டை ஓடுகளா? விரட்டும் வழிமுறைகள்!

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ஜன. 4-இல் புதுக்கோட்டை வருகை!

SCROLL FOR NEXT