பட்ஜெட்டில் 6 அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2025 - 26 ஆம் நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார்.
இதனிடையே, மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பட்ஜெட் குறித்து நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
“உலகில் வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சியை ஊக்கப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட்டில் வரி, மின்சாரம், சுரங்கம், நிதி சீர்திருத்தம் உள்ளிட்ட 6 அம்சங்களுக்கு முக்கியத்தும் அளிக்கப்பட்டுள்ளது.
கிசான் கடன் அட்டை மூலம் கூடுதல் கடன் வழங்கப்படவுள்ளது. கிராமப் புறங்களில் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு, அதன்மூலம் ஊரகப் பகுதிகளில் வளர்ச்சி திட்டங்களை ஊக்கவிக்க திட்டம் கொண்டுவரப்படும்” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.