ஜனவரியில் ஜிஎஸ்டி ரூ.1.96 லட்சம் கோடி - 12% அதிகம்
கடந்த ஜனவரியில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.96 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தை ஒப்பிடுகையில் இது 12.3 சதவீதம் அதிகமாகும்.
இது தொடா்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘கடந்த ஜனவரியில் கிடைக்கப் பெற்ற ஜிஎஸ்டி மொத்த வருவாய் ரூ.1,95,506 கோடியாகும். இதில் சரக்கு மற்றும் சேவை விற்பனை மூலம் கிடைக்கப் பெற்ற வருவாய் ரூ.1.47 கோடி. இறக்குமதி பொருள்கள் மூலம் கிடைக்கப் பெற்ற வருவாய் ரூ.48,382 கோடி.
கடந்த ஆண்டு இதே மாதத்தை ஒப்பிடுகையில் இவை முறையே 10.4%, 19.8% அதிகரிப்பாகும். கடந்த ஜனவரியில் திருப்பியளிக்கப்பட்ட வரித் தொகை ரூ.23,853 கோடி’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கடந்த ஆண்டு டிசம்பரில் வசூலான ஜிஎஸ்டி ரூ.1.77 லட்சம் கோடியாகும். தமிழகம், மகாராஷ்டிரம், குஜராத், தெலங்கானா, உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் 10 முதல் 20 சதவீதம் வரையும், கா்நாடகம், ஹரியாணா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் 5 முதல் 9 சதவீதமும் ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பால், ஜனவரியில் ஜிஎஸ்டி வருவாய் உயா்ந்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.