108 ஆம்புலன்ஸ்(கோப்புப்படம்)  
இந்தியா

மகாராஷ்டிரத்தில் வேகமாக வந்த ஆம்புலன்ஸ் மோதியதில் 2 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் ஆம்புலன்ஸ் மோதியதில் 2 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

DIN

மகாராஷ்டிரத்தில் ஆம்புலன்ஸ் மோதியதில் 2 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், லத்தூர் நகரில் வேகமாக வந்த ஆம்புலன்ஸ் மோதியதில் இரண்டு பாதசாரிகள் பலியானதாக காவல்துறை அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் ஹடோல்டி மற்றும் வல்சங்கி கிராமங்களுக்கு இடையே இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து காவல் ஆய்வாளர் புஸ்னுரே கூறியதாவது, சாயா மனோகர் குர்மே (55) மற்றும் அவரது மைத்துனர் பாபுராவ் கும்ரே (70) ஆகியோர் சாலையைக் கடக்கும்போது, ​​ஹடோல்டியிலிருந்து ஷிரூர் தாஜ்பந்திற்கு வேகமாக வந்த ஆம்புலன்ஸ் அவர்கள் மீது மோதியது.

புதுச்சேரி: நூதன முறையில் மதுப்புட்டிகள் கடத்தியவர் கைது!

இதில் சாயா குர்மே சம்பவ இடத்திலேயே பலியானார்.

பாபுராவ் குர்மே மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல்: பிரதமர் மோடி உள்பட பாஜக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு!

சத்தீஸ்கரில் நாளை 100 மாவோயிஸ்டுகள் சரண்: துணை முதல்வர் விஜய் சர்மா!

2025-க்கான புகைப்படக் கலைஞர் விருது பெறும் இந்தியர் ராகுல் சச்தேவ்!

உலகக் கோப்பை: ஆஸி.க்கு 199 ரன்கள் இலக்கு நிர்ணயித்த வங்கதேசம்!

மனோஹரிதா... ருக்மிணி வசந்த்!

SCROLL FOR NEXT