மகாராஷ்டிரத்தில் வேகமாக வந்த ஆம்புலன்ஸ் மோதியதில் 2 பேர் பலி
மகாராஷ்டிரத்தில் ஆம்புலன்ஸ் மோதியதில் 2 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரத்தில் ஆம்புலன்ஸ் மோதியதில் 2 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், லத்தூர் நகரில் வேகமாக வந்த ஆம்புலன்ஸ் மோதியதில் இரண்டு பாதசாரிகள் பலியானதாக காவல்துறை அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் ஹடோல்டி மற்றும் வல்சங்கி கிராமங்களுக்கு இடையே இந்த சம்பவம் நடந்துள்ளது.
Advertisement
Advertisement
இதுகுறித்து காவல் ஆய்வாளர் புஸ்னுரே கூறியதாவது, சாயா மனோகர் குர்மே (55) மற்றும் அவரது மைத்துனர் பாபுராவ் கும்ரே (70) ஆகியோர் சாலையைக் கடக்கும்போது, ஹடோல்டியிலிருந்து ஷிரூர் தாஜ்பந்திற்கு வேகமாக வந்த ஆம்புலன்ஸ் அவர்கள் மீது மோதியது.
புதுச்சேரி: நூதன முறையில் மதுப்புட்டிகள் கடத்தியவர் கைது!
இதில் சாயா குர்மே சம்பவ இடத்திலேயே பலியானார்.
பாபுராவ் குர்மே மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.