பிரதமர் மோடி - ரேகா குப்தா impress
இந்தியா

பிரதமர் மோடியுடன் ரேகா குப்தா சந்திப்பு!

மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியுடன் ரேகா குப்தா..

DIN

தில்லியின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள ரேகா குப்தா, தேசிய தலைநகரில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நிகழ்த்தப்பட்டதாக அவர் கூறினார்.

பிப்ரவரி 20 அன்று ராம் லீலா மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவின்போது இருவரும் சந்திப்பு மேற்கொண்டனர். இந்நிகழ்வின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பல்வேறு தலைவர்களும் இருந்தனர்.

முன்னதாக இன்று தேசிய தலைநகரின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, சேதமடைந்த சாலைகளைச் சீர்செய்வது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் குப்தா ஒரு சந்திப்பை மேற்கொண்டார். அப்போது சேதமடைந்த சாலைகள், போக்குவரத்து தொடர்பான அனைத்து பிரச்னைகளும் விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கினார் என்று பாஜகவின் எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தில்லியின் பொதுப்பணித்துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா, பைரோன் மார்க் முதல் சராய் காலே கான், ரிங் ரோடு வரை துறையின் திட்டங்களை ஆய்வு செய்தார்.

தில்லியின் முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அதிஷி, தில்லி அரசு பெண்களுக்கு ரூ.2,500 வழங்கும் திட்டத்தை இன்னும் நிறைவேற்றாதது குறித்து தனது கவலையைத் தெரிவித்து முதல்வர் ரேகா குப்தாவுக்கு கடிதம் எழுதினார். மேலும், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க தில்லி முதல்வரை சந்திக்க ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பி.இ. மாணவா் சோ்க்கை கலந்தாய்வு: இரு சுற்றுகளில் 92,423 பேருக்கு ஒதுக்கீடு: 3-ஆம் சுற்று இன்று நிறைவு

வீட்டுவசதி வாரிய வட்டி தள்ளுபடி: அடுத்த ஆண்டு மாா்ச் வரை நீட்டிப்பு

முதலமைச்சரின் தாயுமானவா் திட்டம்: வயது முதிா்ந்தோருக்கு ஆக.12 முதல் வீடு தேடி ரேஷன்

‘வரிகளின் அரசன்’ குற்றச்சாட்டு முதல் 50% வரி வரை... டிரம்ப் அறிவிப்புகள்!

5 ஆண்டுகளுக்கு 1,500 மெகாவாட் மின்சாரம்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின்வாரியம்

SCROLL FOR NEXT