PTI
இந்தியா

மகா கும்பமேளா குறித்து சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள்: 140 பேர் மீது வழக்குப்பதிவு!

சமூக ஊடக நிர்வாகிகள் 140 பேர் மீது 13 எஃப்.ஐ.ஆர்...

DIN

மகா கும்பமேளா குறித்து சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைப் பகிர்ந்தாக 140 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

கும்பமேளாவுக்கு வருகை தரும் பெண்கள் பலர் குளிப்பதை பதிவு செய்து அந்த விடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை கிளப்பிய நிலையில், காவல் துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தியது. சமூக விரோதிகள் அநாகரிக செயல்களில் ஈடுபடாமலிருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கும்பமேளா குறித்து தவறான மற்றும் திசைதிருப்பும் தகவல்களைப் பகிர்ந்துள்ள சமூக ஊடக நிர்வாகிகள் 140 பேர் மீது 13 வழக்குகள் பதியப்பட்டிருப்பதாக மகா கும்பமேளா காவல் துறை டிஐஜி வைபவ் கிருஷ்ணா தெரிவித்தார்.

இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது: இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அவர், மகா சிவராத்திரியையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும், மகா கும்பமேளா நடைபெறும் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமலிருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை (பிப். 23) கும்பமேளாவில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் புனித நீராடியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி!

பாஜகஉறவு முறிந்தது! கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ் அணி அறிவிப்பு!-பண்ருட்டி ராமச்சந்திரன்

அறிவுசார் திட்டம் என்றாலே ஆக்கிரமிப்பு! ஆற்றுப்படுகையில் எதற்கு அரசின் திட்டங்கள்?அன்புமணி பேச்சு!

அரசின் ஏவல் படையா, அமலாக்கத் துறை? அதிகாரப்பூர்வ தகவலைப் பகிர்ந்து திரிணாமுல் எம்.பி. கேள்வி!

இந்த வார ஓடிடி படங்கள்!

SCROLL FOR NEXT