இந்தியா

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து கர்நாடகத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

அரசுப் பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் பற்றி..

DIN

கர்நாடகத்தில் அரசுப் பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து பாஜகவினர் இன்று (ஜன. 3) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநிலத்தில் அரசுப் பேருந்து கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்த கர்நாடக அமைச்சரவை வியாழக்கிழமை முடிவு செய்தது. ஞாயிற்றுக்கிழமை முதல் இது அமலுக்கு வருகிறது. கட்டண உயர்வின் மூலம் அரசுக்கு மாதந்தோறும் ரூ.74.85 கோடியும், ஆண்டுக்கு ரூ.784 கோடியும் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெஜஸ்டிக்கில் உள்ள கெம்பேககௌடா பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோகன் தலைமை வகித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அசோகன், ஏற்கனவே மாநிலத்தில் விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்படுகின்றனர். இந்த நிலையில் பேருந்து கட்டண உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.

பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக தலைவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீரவநல்லூரில் புதிய சாா்பதிவாளா் அலுவலகம் திறப்பு

மானூரில் வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி மாணவா்கள் போராட்டம்

முக்கூடலில் சாா் பதிவாளா் அலுவலகம் திறப்பு

புதிய தமிழகம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

ஐ.டி. ஊழியா் கொலை வழக்கு: சிபிசிஐடி விசாரணை தொடக்கம்

SCROLL FOR NEXT