கோப்புப்படம். 
இந்தியா

தற்கொலை நோக்கில் யமுனை ஆற்றில் குதித்த சிறுமியை காப்பாற்றிய போலீஸார்

தில்லியில் தற்கொலை நோக்கில் யமுனை ஆற்றில் குதித்த 15 வயது சிறுமியை போலீஸார் காப்பாற்றியுள்ளனர்.

DIN

தில்லியில் தற்கொலை நோக்கில் யமுனை ஆற்றில் குதித்த 15 வயது சிறுமியை போலீஸார் காப்பாற்றியுள்ளனர்.

தலைநகர் தில்லியில் உள்ள ரூப் நகர் காவல் நிலையத்திற்கு மகள் காணாமல் போனதாக பெண் ஒருவரிடம் இருந்து சனிக்கிழமை அழைப்பு வந்திருக்கிறது. குடும்பத்தினர் அனைவரும் வெளியில் சென்றிருந்த நிலையில், தனது மகள் வீட்டில் தனியாக இருந்ததாக சிறுமியின் தாயார் போலீஸாரிடம் தெரிவித்திருக்கிறார்.

வீட்டிற்குத் திரும்பியதும், சிறுமி தற்கொலைக் குறிப்பு கடிதத்தை மகன் கண்டுபிடித்தாகவும், எனவே, தனது மகள் கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று தாய் கவலைப்பட்டுள்ளார்.

உடனே காவல் அதிகாரி வினிதா தியாகி தலைமையிலான போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சிக்னேச்சர் பாலம் மற்றும் வஜிராபாத் பழைய பாலம் பகுதிகளை மையப்படுத்தி, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அவர்கள் விசாரணையில் இறங்கினர்.

பேருந்து - கார் மோதல்: சபரிமலை சென்ற தமிழக பக்தர்கள் இருவர் பலி!

மேலும் மெட்ரோ தள காவலர்களுக்கும் தகவல் தெரிவித்து தேடுதல் பணியை மேற்கொண்டனர். காவல் துறையின் துணை ஆணையர் ராஜா பந்தியா கூறுகையில், தேடலின் போது ​​சிறுமி யமுனை ஆற்றில் குதிப்பதைக் கண்டோம்.

உடனடியாக காவலரும் நீச்சல் வீரருமான பிரிஜேஷ் குமார் ஆற்றில் குதித்து அந்த சிறுமியைக் காப்பாற்றினார். சிறுமியை பத்திரமாக கரைக்கு இழுத்து கொண்டு வந்து காவல் துறையினர் ஆலோசனை நடத்தினர். பின்னர் அந்த சிறுமி அவரது குடும்பத்துடன் மீண்டும் இணைந்தார் என்று தெரிவித்தார்.

முன்னதாக சிறுமியின் படிப்பு தொடர்பாக வீட்டில் தாயுடன் நடைபெற்று உரையாடலுக்குப் பிறகே அவர் இந்த தற்கொலை முடிவை நாடிச் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT