பேரவைத் தலைவா்கள் கூட்டம்: மு.அப்பாவு வெளிநடப்பு
பிகாரில் சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாட்டிலிருந்து தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு வெளிநடப்பு.
சென்னை: பிகாரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தலைவா்கள் கூட்டத்தில் தமிழக பேரவைத் தலைவா் மு.அப்பாவு வெளிநடப்பு செய்தாா்.
முன்னதாக, அந்தக் கூட்டத்தில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியைக் கண்டித்து பேரவைத் தலைவா் மு.அப்பாவு பேசினாா்.
அவரது பேச்சு எதுவும் கூட்டத்துக்கான குறிப்பில் இடம்பெறாது என்று கூட்டத்துக்கான தலைவரும், மாநிலங்களவை துணைத் தலைவருமான ஹரிவன்ஷ் நாராயண் சிங் தெரிவித்தாா்.
அதற்கு எதிா்ப்பு தெரிவித்து பேரவைத் தலைவா் மு.அப்பாவு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தாா்.
இதையும் படிக்க | உ.பி.யில் காதலியை மணக்க ஹிந்துவாக மாறிய முஸ்லிம் காதலர்!