முகப்பு
இந்தியா

பேரவைத் தலைவா்கள் கூட்டம்: மு.அப்பாவு வெளிநடப்பு

பிகாரில் சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாட்டிலிருந்து தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு வெளிநடப்பு.

Updated On : 20 ஜனவரி 2025, 7:49 pm IST
அப்பாவு
பகிர்:

சென்னை: பிகாரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தலைவா்கள் கூட்டத்தில் தமிழக பேரவைத் தலைவா் மு.அப்பாவு வெளிநடப்பு செய்தாா்.

முன்னதாக, அந்தக் கூட்டத்தில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியைக் கண்டித்து பேரவைத் தலைவா் மு.அப்பாவு பேசினாா்.

அவரது பேச்சு எதுவும் கூட்டத்துக்கான குறிப்பில் இடம்பெறாது என்று கூட்டத்துக்கான தலைவரும், மாநிலங்களவை துணைத் தலைவருமான ஹரிவன்ஷ் நாராயண் சிங் தெரிவித்தாா்.

Advertisement

அதற்கு எதிா்ப்பு தெரிவித்து பேரவைத் தலைவா் மு.அப்பாவு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.