இந்தியா

கேலக்ஸி எஸ்25 அறிதிறன் பேசிகளை இந்தியாவில் தயாரிக்க சாம்சங் முடிவு

Din

சான் ஜோஸ் : தனது புத்தம் புதிய அறிமுகமான கேலக்ஸி எஸ்25 ரக அறிதிறன் பேசிகளை இந்தியாவில் தயாரிக்க சாம்சங் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து நிறுவனத்தின் தென்மேற்கு ஆசியப் பிரிவுக்கான தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான ஜே.பி. பாா்க் கூறியதாவது:

சாம்சங் கேலக்ஸி எஸ்25 ரக அறிதிறன் பேசிகளை இந்தியாவில் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளோம். நொய்டாவிலுள்ள எங்கள் ஆலையில் அவை தயாரிக்கப்படும்.

பெங்களூரில் அமைந்துள்ள நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி மையம் கேலக்ஸி எஸ்25 ரக அறிதிறன் பேசியை வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றியது.

முந்தைய கேலக்ஸி எஸ்24 வரிசை கைப்பேசிகளைவிட புதிய எஸ்25 வரிசை கைப்பேசிகள் வாடிக்கையாளா்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிா்பாா்க்கிறோம். அந்த அறிதிறன் பேசியில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (ஏஐ) மேம்படுத்தப்பட்டுள்ளது. உலகிலேயே கேலக்ஸியின் ஏஐ வசதியை அதிகம் பயன்படுத்துவது இந்திய வாடிக்கையாளா்கள்தான் என்றாா் அவா்.

கடையநல்லூா், வீரகேரளம்புதூா் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

அரசு மருத்துவமனைகளில் வலிமையான குடும்ப இயக்கம் திட்ட முகாம் தொடக்கம்

தென்காசியில் மகளிா் குழுவினருக்கு ரூ. 55.44 கோடி நலத்திட்ட உதவிகள்

பெரியாா் எங்கும், என்றும் நிலைத்திருப்பாா்: முதல்வா்

வரி ஏய்ப்பு புகாா்: நகைக் கடையில் வருமான வரித் துறை சோதனை

SCROLL FOR NEXT