இந்தியா

கேலக்ஸி எஸ்25 அறிதிறன் பேசிகளை இந்தியாவில் தயாரிக்க சாம்சங் முடிவு

Din

சான் ஜோஸ் : தனது புத்தம் புதிய அறிமுகமான கேலக்ஸி எஸ்25 ரக அறிதிறன் பேசிகளை இந்தியாவில் தயாரிக்க சாம்சங் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து நிறுவனத்தின் தென்மேற்கு ஆசியப் பிரிவுக்கான தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான ஜே.பி. பாா்க் கூறியதாவது:

சாம்சங் கேலக்ஸி எஸ்25 ரக அறிதிறன் பேசிகளை இந்தியாவில் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளோம். நொய்டாவிலுள்ள எங்கள் ஆலையில் அவை தயாரிக்கப்படும்.

பெங்களூரில் அமைந்துள்ள நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி மையம் கேலக்ஸி எஸ்25 ரக அறிதிறன் பேசியை வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றியது.

முந்தைய கேலக்ஸி எஸ்24 வரிசை கைப்பேசிகளைவிட புதிய எஸ்25 வரிசை கைப்பேசிகள் வாடிக்கையாளா்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிா்பாா்க்கிறோம். அந்த அறிதிறன் பேசியில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (ஏஐ) மேம்படுத்தப்பட்டுள்ளது. உலகிலேயே கேலக்ஸியின் ஏஐ வசதியை அதிகம் பயன்படுத்துவது இந்திய வாடிக்கையாளா்கள்தான் என்றாா் அவா்.

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT