கேரளத்தில் எரிந்த காரில் இருந்து சடலம் மீட்பு
கேரளத்தில் எரிந்துகொண்டிருந்த காரில் இருந்து சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
கேரளத்தில் எரிந்துகொண்டிருந்த காரில் இருந்து சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தின் தொடுபுழாவில் உள்ள ரப்பர் தோட்டத்தில் கார் ஒன்று சனிக்கிழமை எரிந்துகொண்டிருந்தது.
தோட்டத்துக்குள் கார் எரிந்து கொண்டிருந்ததை அறிந்த குடியிருப்புவாசிகள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
வூஹான் பொதுமுடக்கம் தொடங்கி 5 ஆண்டுகள்.. தொடரும் சவால்கள்
நிகழ்விடத்துக்கு விரைந்த போலீஸார் மற்றும் தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர்.
பின்னர் காரில் இருந்து எரிந்த நிலையில் கிடந்த சடலத்தை மீட்டனர். அவர் அருகில் வசிக்கும் ஒருவருடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அந்த நபர் மளிகைப் பொருட்களை வாங்குவதற்காக காரில் வந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
காரில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் இறப்புக்கான சரியான காரணம் விரிவான விசாரணைக்குப் பிறகே தெரியவரும் என போலீஸார் கூறினர்.