முகப்பு
இந்தியா

குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் 2 ஐபோன்கள் திருட்டு!

திருமண நிகழ்வில் பங்கேற்றபோது குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுனிதா அகர்வாலின் இரண்டு மொபைல் போன்கள் திருடப்பட்டுள்ளன.

Updated On : 30 ஜனவரி, 2025 at 10:21 AM
குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுனிதா அகர்வால்.
பகிர்:

திருமண நிகழ்வில் பங்கேற்றபோது குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுனிதா அகர்வாலின் இரண்டு மொபைல் போன்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுனிதா அகர்வால் ஒரு திருமணத்தில் கலந்துகொள்வதற்காக ஜன. 26 அன்று டேராடூனுக்குச் சென்றிருந்தார்.

மால்சியில் உள்ள நியூ முசோரி சாலையில் ஃபுட்ஹில் கார்டனில் நடந்த திருமண விழாவில் கலந்துகொண்டபோது அன்று மாலை 4.45 - 5.15 மணிக்குள் அவரது இரண்டு ஐபோன்கள் திருடு போயுள்ளன. இந்த இரண்டு போன்களில் ஒன்று தலைமை நீதிபதியின் பெயரிலும் மற்றொன்று பதிவாளர் அலுவலகத்தின் பெயரிலும் உள்ளது.

தகவலறிந்த காவல்துறையினர் திருமண நிகழ்வு நடக்கும் இடத்திற்கு வந்து சோதனை மேற்கொண்டனர். எனினும் திருடனை கண்டுபிடிக்க முடியவில்லை.

குஜராத் உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் மூல்சந்த் தியாகி இதுகுறித்து ராஜ்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →