இந்தியா

கேரளம்: 2 வயது சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு!

பலராமபுரத்தில் சிறுவனின் சடலம் பற்றி..

DIN

கேரளத்தின் திருவனந்தபுரத்தில் இரண்டு வயது சிறுவனின் சடலம் கிணற்றில் மிதந்ததையடுத்து, போலீஸார் உடலைக் கைப்பற்றினர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரத்தின் பலராமபுரத்தில் வசித்துவந்த தம்பதி ஸ்ரீது, ஸ்ரீஜித். இவர்களுக்கு தேவேந்து(2) வயது மகன். வழக்கம்போல் சிறுவன் தூங்கிக்கொண்டிருந்தான். திடீரென குழந்தை காணவில்லை. எங்குத் தேடியும் கிடைக்காத நிலையில் சிறுவனின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரை ஏற்று போலீஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, பாலராமபுரத்தில் உள்ள அவர்களது வீட்டில் உள்ள கிணற்றில் சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. பின்னர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களால் குழந்தையின் உடல் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது.

கிணற்றைச் சுற்றி சுவர் எழுப்பப்பட்டிருந்த நிலையில் சிறுவன் கிணற்றில் விழுந்தது எப்படி? அவரின் பெற்றோர் மற்றும் மாமாவிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக்கடன் திட்டம்: பிகார் அரசு!

வங்க தேசத்தில் குவிக்கப்படும் அமெரிக்க ராணுவம்! காரணம் என்ன?

ஆம்பூர் இளைஞர் கொலை: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் கைது!

நாடு கடத்தப்படத் தயாராக இருங்கள்: கிர்க்கின் கொலையைக் கொண்டாடும் வெளிநாட்டவருக்கு அமெரிக்க செயலர் எச்சரிக்கை!

ரூ. 500 கோடி வசூலித்தும் ஏமாற்றத்தைக் கொடுத்த கூலி!

SCROLL FOR NEXT