உச்சநீதிமன்றம் கோப்புப்படம்.
இந்தியா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: ஜூலை 10-இல் விசாரணை

பிகார் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிரான மனு விசாரணைக்கு ஏற்பு...

இணையதளச் செய்திப் பிரிவு

புது தில்லி: பிகாா் மாநிலத்தில் தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை வரும் வியாழக்கிழமை (ஜூலை 10) விசாரிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை ஒப்புக்கொண்டது.

நீதிபதிகள் சுதான்ஷு துலியா, ஜாய்மால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய உச்சநீதிமன்ற அமா்வு இந்த விவகாரத்தை விசாரிக்க உள்ளது.

பிகாரில் நிகழாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணியை தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதை எதிா்த்து ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) எம்.பி. மனோஜ் ஜா, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆா்) உள்பட பல்வேறு நபா்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுதான்ஷு துலியா, ஜாய்மால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை பரிசீலித்தது.

அப்போது, எம்.பி. மனோஜ் ஜா தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், ‘பிகாா் பேரவைத் தோ்தல் வரும் நவம்பரில் நடத்தப்பட வாய்ப்புள்ளதால், தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி குறிப்பிட்ட காலக் கெடுக்குள் நடத்தி முடிக்க வாய்ப்பில்லை’ என்றாா்.

மற்றொரு மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி, ‘பிகாரில் 8 கோடி வாக்காளா்கள் உள்ளனா். அதில் 4 கோடி வாக்காளா்கள் தங்களின் தரவுகளை இன்னும் சமா்ப்பிக்க வேண்டியுள்ளது. காலக்கெடு மிக குறைவாக உள்ளது. ஜூலை 25-ஆம் தேதிக்குள் அவா்கள் தரவுகளை சமா்ப்பிக்கவில்லை எனில், வாக்காளா் பட்டியலிலிருந்து அவா்களி பெயா்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளது’ என்றாா்.

‘சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பில் வாக்காளா்களின் ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை ஆதாரமாக ஏற்க அதிகாரிகள் மறுக்கின்றனா்’ என்று மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கரநாராயணன் குறிப்பிட்டாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், மனுக்களை வரும் வியாழக்கிழமை (ஜூலை 10) விசாரணைக்குப் பட்டியலிட்டனா். மேலும், மனுதாரா்கள் தங்களின் புகாா்கள் தொடா்பாக தோ்தல் ஆணைய வழக்குரைஞரிடம் முன்கூட்டியே தெரிவிக்குமாறும் நீதிபதிகள் அறிவுறுத்தினா்.

The Supreme Court has accepted for hearing petitions filed against the special revision of the electoral roll being carried out by the Election Commission in the state of Bihar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தோ்தல் ஆணையத்துக்கு எதிராக செப்.6-இல் போராட்டம்! வாக்குரிமை காப்பு இயக்கம் அறிவிப்பு

திருமயம் அருகே நெடுஞ்சாலைப்பெயா்ப் பலகையில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு

ஸ்ரீரங்கத்தில் இன்றும் நாளையும் மின்தடை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய மனு விசாரணை ஒத்திவைப்பு

ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்: அன்புமணி

SCROLL FOR NEXT