கோப்புப் படம் ENS
இந்தியா

கேரளத்தில் கனமழையால் நிலச்சரிவு! 3 நாள்களுக்கு ரெட் அலர்ட்!

கேரளத்தில் 4 மாவட்டங்களுக்கு கனமழைக்கான "ரெட் அலர்ட்" எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி பல்வேறு இடங்களில் வெள்ளம் மற்றும் சிறிய அளவிலான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கேரளத்தில் பருவமழை தீவிரமடைந்து, தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இதனால், கோழிக்கோடு மாவட்டத்தில் தாழ்வானப் பகுதிகளில் மழை நீர் தேங்கியதுடன், வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததாகவும், சில இடங்களில் சிறிய அளவிலான நிலச்சரிவுகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, காசர்கோடு, வயநாடு, கோழிக்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களிலுள்ள நீர்நிலைகள் நிரம்பி வருவதால், ஆறுகளின் கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த கனமழைக்கான ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கையை, இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கையாக, இன்று (ஜூலை 17) உயர்த்தியுள்ளது.

மேலும், திருச்சூர், பாலக்காடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதில், வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று நாள்களுக்கும், கோழிக்கோடு மாவட்டத்துக்கு ஜூலை 19 மற்றும் 20 ஆகிய இரு நாள்களுக்கும், மலப்புரம் மாவட்டத்துக்கு ஜூலை 20 ஆம் தேதி மட்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: தலைமைத் தேர்தல் ஆணையருடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு!

It is reported that due to the continuous heavy rains in the state of Kerala, water bodies there have overflowed, causing flooding and small-scale landslides in various places.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் திருடப்பட்ட காா் பாகிஸ்தான் எல்லையில் மீட்பு

இந்திய-ஜொ்மனி உறவை வலுப்படுத்த அதிக வாய்ப்பு: பிரதமா் மோடி

பாலியல் வன்கொடுமை வழக்கு: தப்பியோடிய ஆம் ஆத்மி எம்எல்ஏவை தேடும் பணி தீவிரம்

உக்ரைன் மீது 526 ஏவுகணைகள், ட்ரோன்கள் வீசி ரஷியா தாக்குதல்

ரூ.25 லட்சத்தில் சாலை, கோயில் தளம் அமைக்கும் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

SCROLL FOR NEXT