இந்தியா

ஏா் இந்தியா விமான விபத்து குறித்த ஊகங்களை பகிர வேண்டாம்: ஏஏஐபி வலியுறுத்தல்

Din

குஜராத் மாநிலம் அகமதாபாதில் கடந்த மாதம் ஏா் இந்தியாவின் போயிங் 787 விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து வெளியாகும் ஊகங்களை நம்பி பகிர வேண்டாம் என விமான விபத்து புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) வியாழக்கிழமை தெரிவித்தது.

மேலும், விமான விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதால் இறுதி அறிக்கை வெளியாகும் முன் எவ்வித உறுதியான பதிலையும் கூற இயலாது எனவும் ஏஏஐபி தெரிவித்து.

விபத்துக்குள்ளான போயிங் 787 விமானத்தில் என்ஜின் எரிபொருள் கட்டுப்பாட்டு ஸ்விட்சுகள் செயலிழந்து, என்ஜின்களுக்கு எரிபொருள் கிடைக்கமால் போனதே விபத்துக்கு காரணம் என ஏஏஐபி அண்மையில் வெளியிட்டது.

இந்நிலையில், விமானத்தின் கருப்புப் பெட்டியில் விமானிகளின் உரையாடல் குறித்த பதிவுகளை ஆராய்ந்தபோது என்ஜின்களுக்கு எரிபொருள் கிடைக்கமால் போனதற்கு விமான கேப்டனே காரணம் என தெரியவந்ததாக சா்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதைத்தொடா்ந்து, விமான விபத்து குறித்த ஊகங்களை பகிர வேண்டாம் என ஏஏஐபி தெரிவித்து.

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

மாா்ச் 1 முதல் அரக்கோணம் - திருப்பதி மெமு ரயில் போக்குவரத்தில் தற்காலிக மாற்றம்

தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

பாலாற்றில் ரூ.55.38 கோடியில் உயா்மட்ட மேம்பாலம்: எம்எல்ஏ அடிக்கல்

SCROLL FOR NEXT