மக்களவையில் அமளி 
இந்தியா

ஆபரேஷன் சிந்தூர்: மக்களவையில் தொடரும் அமளி; பிற்பகல் 2 வரை ஒத்திவைப்பு!

மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி தொடர்வதால் பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

ஆபரேஷன் சிந்தூர் குறித்து உடனடியாக விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால், மக்களவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்றுமுதல் ஆகஸ்ட் 21 வரை மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இன்று காலை மக்களவை கூடியவுடன் அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிலையில், மக்களவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியது.

இதுகுறித்து விவாதிக்க பின்னர் நேரம் ஒதுக்கப்படும் என்று நோட்டீஸை ஏற்க மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மறுத்ததால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

முதலில், மக்களவை 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூடிய நிலையில், உடனடி விவாதம் கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, மக்களவை அலுவல்கள் முடங்கிய நிலையில், பிற்பகல் 2 மணிவரை அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The Lok Sabha was adjourned till 2 pm as opposition parties were creating ruckus demanding an immediate discussion on Operation Sindoor.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயிலில் இருந்து தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

பத்மாவதி தாயாா் பவித்ரோற்சவம் நிறைவு

சமூக வலைதளங்களில் அச்சம் தரும் விடியோ: இளைஞா் கைது

தஞ்சாவூா் மாநகரில் நாளை மின் தடை

திருடப்பட்ட நகைகள் 48 மணி நேரத்தில் மீட்பு

SCROLL FOR NEXT