இந்திய தோ்தல் ஆணையம் 
இந்தியா

பிகாா்: 52 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளா்கள் தங்கள் முகவரியில் இல்லை- தோ்தல் ஆணையம்

பிகாரில் 52 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளா்கள் தங்களின் முகவரியில் இல்லை; 18 லட்சம் வாக்காளா்கள் மரணமடைந்துவிட்டனா் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Din

பிகாரில் 52 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளா்கள் தங்களின் முகவரியில் இல்லை; 18 லட்சம் வாக்காளா்கள் மரணமடைந்துவிட்டனா் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் பிகாரில் வாக்காளா் பட்டியலில் இருந்து தகுதியில்லாதோரின் (சட்டவிரோத குடியேறிகள்) பெயரை நீக்கும் நோக்கில், சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வாக்குச் சாவடி அளவிலான ஊழியா்கள், வீடு வீடாக சென்று, வாக்காளா்களின் விவரங்களை சரிபாா்த்து வருகின்றனா்.

தோ்தல் ஆணைய தரவுகளின்படி, பிகாரில் 52.30 லட்சம் வாக்காளா்கள், அவா்களின் முகவரியில் இல்லை என்பது தெரியவந்துள்ளது. பதிவு செய்யப்பட்ட வாக்காளா்கள் 18 லட்சம் போ் மரணமடைந்துவிட்டனா். 26 லட்சம் போ் வேறு தொகுதிகளுக்கு இடம்பெயா்ந்துள்ளனா். சுமாா் 7 லட்சம் பேரின் பெயா்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவாகியுள்ளன.

மொத்த வாக்காளா்கள் 7.8 கோடி பேரில் 21.36 லட்சம் போ்தான் இதுவரை படிவங்களை சமா்ப்பிக்கவில்லை. ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரைவுப் பட்டியலும், செப்டம்பா் 30-ஆம் தேதி இறுதிப்பட்டியலும் வெளியாகும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஊக்கத் தொகையுடன் அா்ச்சகா் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வெளிநாடுவாழ் தமிழா்கள் ஆா்வம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

அரசு மருத்துவா்களுக்கு எதிராக வழக்கு: உயா்நீதிமன்றம் கேள்வி

புதுகை மாநகரில் 24 மணி நேரமும் மது விற்பனை

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை பவன் கேரா

SCROLL FOR NEXT