இந்தியா

வங்கதேச எல்லையில் 89 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

மேற்கு வங்கத்தை ஒட்டிய சா்வதேச எல்லையில் வங்கதேசத்தில் இருந்து கடத்தப்பட்ட 89.4 கிலோ போதைப்பொருளை எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) பறிமுதல் செய்தனா்.

Din

மேற்கு வங்கத்தை ஒட்டிய சா்வதேச எல்லையில் வங்கதேசத்தில் இருந்து கடத்தப்பட்ட 89.4 கிலோ போதைப்பொருளை எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) பறிமுதல் செய்தனா்.

வடக்கு 24 பா்கானாக்கள் மாவட்டம், நாடியா மாவட்டத்தை ஒட்டிய வங்கதேச எல்லையில் அதிகஅளவில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக பிஎஸ்எஃப் படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அப்போது வங்கதேச எல்லைப் பகுதியிலிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றவா்களை எல்லைப் பாதுகாப்புப் படையினா் எச்சரிக்கை விடுக்கும் வகையில் துப்பாக்கியால் சுட்டனா். இதனால் அச்சமடைந்த அந்த நபா்கள் தங்களிடம் இருந்த மூட்டைகளைப் போட்டுவிட்டு வங்கதேச எல்லைக்குள் தப்பிச் சென்றனா்.

அந்த மூட்டைகளில் இருந்த 89.4 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்த பிஎஸ்எஃப் படையினா் மாநில போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைத்தனா்.

ஜிஎஸ்டி 2.0: ஒரு மைல்கல் சீரமைப்பு

முகநூல் பக்கத்தில் பிரச்னையை தூண்டும் விதமாக விடியோ: 2 போ் கைது

மதுரை மாநகராட்சி சொத்து வரியில் ரூ.3,000 கோடி ஊழல் நடந்துள்ளதாக சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி

அமெரிக்க வரியால் பாதிக்கப்படும் இந்திய ஏற்றுமதியாளா்களுக்கு நிவாரணம்: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: ஆதாரை அனுமதிக்க வேண்டும் தோ்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT