தேஜ் பிரதாப் யாதவ்  கோப்புப்படம்.
இந்தியா

பிகார் பேரவைத் தேர்தல்: சுயேச்சையாக போட்டி என தேஜ் பிரதாப் அறிவிப்பு

வரவிருக்கும் பிகார் பேரவைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் அறிவித்துள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

வரவிருக்கும் பிகார் பேரவைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் அறிவித்துள்ளார்.

பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை எதிர்கொள்ள பிரதான கட்சிகள் தற்போதே ஆயத்தமாகி வருகின்றன. ஐக்கிய ஜனதா தளம், பாஜக, ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அதற்கான வேலைகளை ஏற்கெனவே தொடங்கிவிட்டன.

இந்த நிலையில் வரவிருக்கும் பிகார் பேரவைத் தேர்தலில் மஹுவா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் சனிக்கிழமை அறிவித்துள்ளார். முன்னதாக, தேஜ் பிரதாப் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அண்மையில் ஒரு பதிவை வெளியிட்டாா்.

46 ஆண்டுகளுக்குப் பிறகு... கே.எல்.ராகுல், ஷுப்மன் கில் புதிய சாதனை!

அதில், ‘ஓா் இளம் பெண்ணுடன் உறவில் இருப்பதாக’ பதிவிட்ட அவா், அப்பெண்ணுடன் இருக்கும் புகைப்படங்களையும் பகிா்ந்தாா். இது பிகாரில் சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரை கட்சியில் இருந்தும், குடும்பத்தில் இருந்தும் நீக்குவதாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் லாலு பிரசாத் தெரிவித்தார்.

இனி கட்சி, குடும்பத்துடன் அவருக்கு எந்தத் தொடா்பும் கிடையாது. அவா் 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கப்படுகிறாா் என்று குறிப்பிட்டார். 2015 முதல் 2020 வரை பேரவைத் தேர்தலில் மஹுவா தொகுதி தொகுதியில் போட்டியிட்ட தேஜ் பிரதாப் 2020-ல் தொகுதி மாறி ஹசன்பூரில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

இருப்பினும் தற்போதும் மஹுவா தொகுதி ராஷ்ட்ரீய ஜனதா தளம்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tej Pratap, who was recently expelled from both the RJD and his family by Lalu Prasad, had earlier represented the Mahua seat in the Bihar Assembly from 2015 to 2020.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தும்பை பூ... நிகிலா விமல்!

கரூர் சம்பவம் தமிழகத்தின் தலைகுனிவு; அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்! - இபிஎஸ்

பாடகர் ஸுபீன் கர்க் மரணம்: மேலாளர், விழா ஏற்பாட்டாளர் மீது கொலை வழக்கு!

அச்சுறுத்தலில் இந்திய ஜனநாயகம்! - கொலம்பியாவில் பிரதமர் மோடியை தாக்கிப் பேசிய ராகுல்!

மகளிர் உலகக் கோப்பை: 129 ரன்களுக்கு ஆட்டமிழந்த பாகிஸ்தான்!

SCROLL FOR NEXT