கோப்புப்படம் 
இந்தியா

ம.பி.யில் 23,000 பெண்கள், சிறுமிகளைக் காணவில்லை!

மத்தியப் பிரதேசத்தில் காணாமல்போன பெண்கள், சிறுமிகளின் எண்ணிக்கை பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

மத்தியப் பிரதேசத்தில் குறைந்தது ஒரு மாதம் முதல் ஒன்றரை ஆண்டுகளாக சுமார் 23,000 சிறுமிகள் மற்றும் பெண்களைக் காணவில்லை என மாநில அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் உள்துறை அமைச்சரும் மூத்த காங்கிரஸ் எம்எல்ஏவுமான பாலா பச்சன், மாநிலத்தில் காணாமல் போன சிறுமிகள், பெண்கள் பற்றி கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு மாநில அரசு எழுத்துப்பூர்வமாக பதிலில் பல தகவல்கள் தெரிய வந்துள்ளது.

கடந்த ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி, மாநிலத்தில் 21,000-க்கும் மேற்பட்ட பெண்களும் 1,900-க்கும் மேற்பட்ட சிறுமிகளும் ஒரு மாதத்திற்கும் மேலாகக் காணாமல் போயுள்ளனர். 2024 ஆம் ஆண்டு காணாமல் போன பெண்கள், சிறுமிகளும் இதில் அடங்குவர். 30 மாவட்டங்களில் தலா 500க்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போயுள்ளனர். போபால், இந்தூர், ஜபல்பூர், சாகர், குவாலியர், சத்தார்பூர், தார் மற்றும் ரேவா மாவட்டங்கள் இதில் அடங்கும்.

தற்போதைய முதல்வர் மோகன் யாதவின் சொந்த மாவட்டமான உஜ்ஜைனியிலும் 500க்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமிகள் காணாமல் போயுள்ளனர். பழங்குடியினர் அதிகமுள்ள பகுதிகளிலும் சிறுமிகள், பெண்கள் காணாமல் போனது தெரியவந்துள்ளது.

மேலும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக குற்றச் செயல்களில் ஈடுபட்ட 1,500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 575 பாலியல் வன்கொடுமை வழக்குகள், 600 பாலியல் தொல்லை வழக்குகள்.

காணாமல் போன பெண்கள் தொடர்பான வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட 76 பேரும் அதேபோல சிறுமிகள் காணாமல்போன வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட 254 பேரும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More than 23,000 women, girls missing in MP for over a month and up to 1.5 years

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை

காலமானாா் பி.சேகா் விஜயபாஸ்கா்

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

மாநிலங்களவைச் செயலகத்தின் செயல்பாடுகளை குடியரசுத் துணைத் தலைவா் மீளாய்வு

மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் 512 மனுக்கள்

SCROLL FOR NEXT