கோப்புப் படம் 
இந்தியா

சட்டவிரோதமாக வசித்த 71 வெளிநாட்டவர் நாடு கடத்தல்!

தில்லியில் சட்டவிரோதமாக வசித்த 71 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

DIN

தில்லியில் சட்டவிரோதமாக குடியேறி வசித்து வந்த 71 வெளிநாட்டவர்கள், தங்களது தாயகங்களுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

தில்லியின் உத்தம் நகர் மற்றும் சாவ்லா ஆகிய பகுதிகளின் காவல் துறையினர் இணைந்து; அம்மாநிலத்தில் உரிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, துவாராகா மாவட்டத்தில், சட்டவிரோதமாக தங்கியிருந்த 71 வெளிநாட்டவர்களை, அம்மாநில காவல் துறையினர் கடந்த மே மாதம் கைது செய்தனர்.

இதில், 41-வங்கதேசத்தினர், 17-மியான்மரின் ரோஹிங்கியா மக்கள், 7 - நைஜீரியா நாட்டினர் கைதானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், அவர்கள் அனைவரின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், தற்போது அவர்கள் தங்களது தாயகங்களுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதையும் படிக்க: அயோத்தி ராமர் கோயில் பிரசாதம்! கோடிக்கணக்கில் மோசடி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம்

இலவச பேருந்து பயண அட்டை: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

பழைய அரங்கல்துருகம் ஸ்ரீ மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

விவசாயிகள் நெல் பயிா்களுக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம்: திருப்பத்தூா் ஆட்சியா்

பாங்க் ஆஃப் பரோடா லாபம் 8% சரிவு!

SCROLL FOR NEXT