கோப்புப் படம் 
இந்தியா

சட்டவிரோதமாக வசித்த 71 வெளிநாட்டவர் நாடு கடத்தல்!

தில்லியில் சட்டவிரோதமாக வசித்த 71 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

DIN

தில்லியில் சட்டவிரோதமாக குடியேறி வசித்து வந்த 71 வெளிநாட்டவர்கள், தங்களது தாயகங்களுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

தில்லியின் உத்தம் நகர் மற்றும் சாவ்லா ஆகிய பகுதிகளின் காவல் துறையினர் இணைந்து; அம்மாநிலத்தில் உரிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, துவாராகா மாவட்டத்தில், சட்டவிரோதமாக தங்கியிருந்த 71 வெளிநாட்டவர்களை, அம்மாநில காவல் துறையினர் கடந்த மே மாதம் கைது செய்தனர்.

இதில், 41-வங்கதேசத்தினர், 17-மியான்மரின் ரோஹிங்கியா மக்கள், 7 - நைஜீரியா நாட்டினர் கைதானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், அவர்கள் அனைவரின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், தற்போது அவர்கள் தங்களது தாயகங்களுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதையும் படிக்க: அயோத்தி ராமர் கோயில் பிரசாதம்! கோடிக்கணக்கில் மோசடி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெளிநாட்டில் சிரித்துக் கொண்டிருந்த மோடி, இந்தியா வந்ததும் அழத் தொடங்கிவிட்டார்! தேஜஸ்வி

இடுகாட்டுத் தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட்: நடிகருக்கு குவியும் வாழ்த்து!

கேப்டன் கூல் தோனி மாதிரி ஆக விரும்பும் பாகிஸ்தான் மகளிரணி கேப்டன்!

1500 முறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திரைப்படம் எது தெரியுமா?

உள்கட்சி பூசல்களை களைய வேண்டும்: தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித் ஷா அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT