முகப்பு
இந்தியா

சோனியா காந்தி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தில்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Updated On : 16 ஜூன், 2025 at 6:27 AM
சோனியா காந்தி (கோப்புப்படம்)
பகிர்:

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தில்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவரும் எம்பியுமான சோனியா காந்திக்கு நேற்று வயிறு தொடர்பான பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தில்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வருகிறார்.

தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும் மருத்துவமனையின் இரைப்பை குடல் பிரிவில் அவர் கண்காணிப்பில் உள்ளதாகவும் சர் கங்கா ராம் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

பில்லூர் அணை நிரம்பியது: வெள்ள அபாய எச்சரிக்கை!

கடந்த வாரம், உயர் இரத்த அழுத்தம் காரணமாக சோனியா காந்தி சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

முன்னதாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதமும் வயிறு தொடர்பான பிரச்னை காரணமாக சோனியா காந்தி சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →