(கோப்புப் படம்) 
இந்தியா

இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! நாக்பூரில் அவசர தரையிறக்கம்!

தில்லி நோக்கி சென்ற இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

DIN

கொச்சியிலிருந்து தில்லி நோக்கி சென்ற இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், நாக்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

கேரளத்தின் கொச்சி விமான நிலையத்துக்கு மஸ்கட்டிலிருந்து இண்டிகோ விமானம் ஒன்று வந்துள்ளது. பின்னர், 157 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் அந்த விமானம் இன்று (ஜூன் 17) காலை தில்லி நோக்கி புறப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சல் மூலம் அடையாளம் தெரியாத நபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்துக்கு எச்சரிக்கைச் செய்தி அனுப்பப்பட்டு, நாக்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

உடனடியாக, பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, வெடிகுண்டு நிபுணர்கள் தற்போது சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சோதனைகள் அனைத்தும் முடிவடைந்தவுடன், விமானம் மீண்டும் தில்லி புறப்படும் எனக் கூறப்படுகிறது.

முன்னதாக, கடந்த ஜூன் 15 ஆம் தேதியன்று, ஜெர்மனியிலிருந்து ஹைதரபாத் வந்த லுஃப்தான்ஸா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், அந்த விமானம் மீண்டும் ஜெர்மனிக்கே திருப்பி அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: அமர்நாத் பாதைகளில்.. ட்ரோன்கள் பறக்கத் தடை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள் இன்று!

இன்றும் நாளையும் 28 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!

நாடாளுமன்றத்துக்கு ரூ.14 கோடியில் நவீன பாதுகாப்பு

கூட்டுறவு வங்கியில் உதவியாளா் காலிப் பணியிட எண்ணிக்கை குறைப்பு

திருவண்ணாமலை: மலையைச் சுற்றியுள்ள 554 ஏக்கரை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்க வேண்டும்

SCROLL FOR NEXT